படித்ததில் பிடித்தது ! பெண் அன்றும் இன்றும் -(கவிதை ) முனைவர் ச.சந்திரா


படித்ததில் பிடித்தது ! பெண் அன்றும் இன்றும் -

 முனைவர் ச.சந்திரா!


 கண்ணீரோடு காலத்தைக் கழித்தாள் பெண் அன்று !
   கணினியோடு காவியம் படைக்கிறாள் இன்று !
   பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமாய்
   அலைக்கழிக்கப்பட்ட ஊஞ்சல் -பெண் அன்று !
   இல்லத்திற்கும் அலுவலகத்திற்குமாய் அலைபாய்ந்து
   வாழ்வைப் பலப்படுத்தும் அஸ்திவாரம் -பெண் இன்று !
       பரமஹம்ஸருக்கு சாரதாதேவி ; வள்ளுவருக்கு வாசுகி
   சிவாஜிக்கு ஜீஜாபாய் காந்திக்கு கஸ்தூரிபாய் ;
       இன்றோ உதாரணத்திற்கு ஒன்றல்ல !இரண்டல்ல !
        பல்லாயிரம் பெண்கள் பாதகங்களைச்
        சாதகமாக்கி      உலக    வரலாற்றில்   உலா!
        விளையாட்டோடு   விண்வெளி ;
    அறிவியலோடு     ஆன்மீகம் ;
   கவியரங்கோடு    கருத்தரங்கம் ;
       கல்வித் துறையுடன் காவல்துறையென
   தரணி எங்கும் பெண்ணின் தடம்பதிப்பு
   எனும் உண்மைக்கு இல்லை என்றும் மறுப்பு !
   விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும்
   பெண்மைக்கே உரிய நளினங்கள்தான் !
   பெண்ணே !காளிதாசனும் கம்பனும் பகர்ந்த
   பெண்மை இலக்கணத்தைப் பொய்யாக்கிக் காட்டு !
   மெல்லினத்தோடு வல்லினத்தையும் இணைத்துப் பார்!
   பெண்ணே !உன் இளம்கரங்கள் இரும்புக் கரங்களாகட்டும்!
   கேள்விக் குறியிலிருந்து பெண்ணினம் விலகட்டும் !
    ஆச்சிரியக் குறியாய் மாறி அகிலத்தையே இனி ஆளட்டும் !
                                  

கருத்துகள்