வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !


வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !

வரிகள் வரிகள் எங்கும் எதிலும் வரிகள் !
வரிசையாக வாங்கும் வரிகள் !

உப்புக்கு வரியா ? என்று தேசப்பிதா அன்று 
உணர்ச்சிப் பொங்கிட எதிர்த்தார் !

திருப்பிய பக்கமெல்லாம் வரிகள் !
தவிக்கும் மக்கள் வரிக் கட்டியே !

முகத்தில் வரிகள் விழுந்தது !
மூழ்கி தவித்து மூச்சு திணருகின்றது !

ஜனவரி பிப்ரவரி மார்ச்சுவரி ஆனது 
ஜனங்களுக்கு மார்ச்சு வந்தால் மாரடைப்பு !

மத்திய மாநில அரசு ஊழியர் பலருக்கு !
மார்ச் மாதம் ஊதியம் இல்லாமல் போனது !

நின்றால் வரி நடந்தால் வரிகள் !
சென்றால்  வரி கடந்தால்   வரிகள் !

உண்ண வரி விடுதியில் உறங்க வரிகள் !
உடைக்கு வரி கேளிக்கை வரிகள் ! 

பெட்ரோலுக்கு வரிகள் ! டீசலுக்கு வரிகள் !
பெற்றோருக்கும்  குழந்தைகளுக்கும் வரிகள் !

எங்கும் எதிலும் வரிகள் !வரிகள்! வரிகள் !
இங்கு வரிகள் இன்றி எதுவுமில்லை !

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே !
ஆனந்த சுந்திரம் அடைந்தோம் என்று !

-- 

கருத்துகள்