உலக குருவிகள் தினம் !
.நவீனம் மனிதனை மாற்றியது
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://www.noolulagam.com/ product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
குருவிகள் !கவிஞர் இரா .இரவி !
வீடு இடிக்கப்பட்டு கூடு சிதைந் தது
மனம் தளராமல் மறுபடியும்
குருவிகள் !
கைகள் இன்றி கட்டின கூடுகள்
மிக அழகாக
குருவிகள் !
வான் பறப்பதில் சிறியன
மக்கள் மனதில் பெரியன
குருவிகள் !
பார்ப்பதற்கு அலகோ
அழகோ அழகு
குருவிகள் !
உருவத்தால் சிறிது
உணர்வால் பெரிது
குருவிகள் !
அன்று குடும்ப உறுப்பினர்கள்
இன்று குடும்பங்களே தனித்தனி
குருவிகள் !
பறந்தால் பரவசம்
பார்த்தால் குதூகலம்
குருவிகள் !
வைக்கோல் மாட்டுக்கு உணவு
வைக்கோல் வீட்டுச் செங்கல்
குருவிகள் !
பறவை இனத்தை அழித்தது
குருவிகள் !
செல்பேசி கோபுரங்கள் பெருகப் பெருக
குறைந்துக் கொண்டே வருகுது
குருவிகள் !
புகைப்படம் எடுத்து வைப்போம்
பேரன்களுக்குக் காட்டிட
குருவிகள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
http://www.noolulagam.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக