எங்கள் நாடு வளர்ந்து விட்டது ! கவிஞர் இரா .இரவி !

எங்கள் நாடு வளர்ந்து விட்டது ! கவிஞர் இரா .இரவி !


முன்பெல்லாம் கட்சியின் 
தலைவர் மட்டுமே 
ஊழல் செய்தார் !
ஆனால் இன்றோ !
தலைவரின் மகன்கள் 
மகள்கள் 
மருமகன்கள் 
மருமகள்கள் 
பேரன்கள் 
பேத்திகள் 
குடும்ப உறுப்பினர்கள் 
அனைவரும் ஒற்றுமையாக 
ஊழல் செய்கின்றனர் !
எங்கள் நாடு வளர்ந்து விட்டது ! 

கருத்துகள்