செல்பேசி ! கவிஞர் இரா .இரவி !

செல்பேசி ! கவிஞர் இரா .இரவி !

அவள் அழைக்கட்டும் என்று நானும்
நான் அழைக்கட்டும் என்று  அவளும்
எதிர்ப்பார்த்தே காலம் கழிந்தது !
இருவருமே அழைக்கவில்லை !
விட்டுக் கொடுத்தவர்கள்
கெட்டுப் போனதில்லை !
கேள்விப்பட்டு இருக்கிறோம் !
விட்டுக் கொடுக்க மனம்
விடுவதே இல்லை !
அடுத்தவருக்கு அறிவுரை
சொல்வது எளிது !
சொன்ன அறிவுரை
சொன்னவர் கடைபிடிப்பது அரிது !
ஊடலை உடைக்க ஒரு நொடி போதும் !
ஒரு போதும் அனுமதிக்கவில்லை
தன் முனைப்பு !


கருத்துகள்