எங்கும் எதிலும் ஆபாச நஞ்சு ! கவிஞர் இரா .இரவி

 எங்கும் எதிலும் ஆபாச நஞ்சு !   கவிஞர் இரா .இரவி
கெட்டதை பார்க்காதே !கேட்காதே ! பேசாதே ! என்றன 
காந்தியடிகளின் குரங்குகள் .
தவறாகப் புரிந்து கொண்ட பலர் .
கெட்டதை பார்த்து ! கேட்டு !பேசுகின்றனர் !
ஆபாச நஞ்சு ஆறாக ஓடுகின்றது 
திரைப்படங்களில் !
ஆபாச நஞ்சு  நதியாக ஓடுகின்றது 
தொலைக்காட்சிகளில் !
ஆபாச நஞ்சு கடலாக ஓடுகின்றது 
வாரப் பத்திரிகைகளில் !
தடுக்கி விழுந்தால் மதுக்கடை 
மதுவும் ஆறாக ஓடுகின்றது !
எங்கும் எதிலும் ஆபாச நஞ்சு !

கருத்துகள்