மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில்  நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு  தொடக்க விழாவில் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் இயக்குனர் பாண்டிய ராஜன் அவர் மகன் நடிகர் பிரிதிவி ராஜன் முன்னிலையில் குழந்தைகள், பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள்  !

தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

------------------------------
------------------------------
கணவன் ; என் மனைவி   வீட்டு ஆள்கள் வந்தால் எங்கள் வீட்டில் மட்டன் சாப்பாடு .
நண்பர் ;உங்க வீட்டு
ஆள்கள் வந்தால் ?
கணவன் ; மட்டமான சாப்பாடு.
----------------------------------------------------------
ஒருவர் ;காப்பிஎவ்வளவு ?
மற்றவர் ;10 ரூபாய் .
ஒருவர் ;எதிர்த்த கடையில்  ஒரு ரூபாய் சொல்றாங்க .
ஒருவர் ;அது செராக்ஸ்  கடை
.
-----------------------------------------------------------
அப்பா ;பரிட்சையில் பாசான சைக்கிள் வாங்கி தருவேன் .
மகன் ;பெயில் ஆயிட்டா
அப்பா ;5 சைக்கிள் வாங்கி வாடகை சைக்கிள் கடை வைத்து தருவேன் .
--------------------------------------------------------------
மகன் ;எதிர் வீட்டு அறிவாளி பையனே  பெயில் ஆகிட்டான் .
அப்பா ;நீ என்ன ஆனாய்?
மகன் ; நான்தான் சொன்னேனே அறிவாளி பையனே  பெயில் ஆகிட்டான் .
உங்க மகன் எப்படி பாசாவான் .

---------------------------------------------------------------

பேருந்தில் ஒருவர் ;.ஏங்க இது நெல்பேட்டையா ?
மற்றவர் ; இல்லை இது என் தோள் பட்டை .
----------------------------------------------------------------

ஆசிரியர் ; "ஆசிரியர் மாணவனை அடித்தார் ."இது என்ன காலம் ?
மாணவன் ;ஆசிரியருக்கு கெட்ட   காலம் .
---------------------------------------------------------------

மாமனார் ;வீட்டுக்கு வந்த மருமகளிடம் அத்தைக்கு மரியாதை கொடுக்கனும்  என்று சொன்னது தப்பா போச்சு .
மற்றவர் .ஏன் ?
மாமனார் ;நானும் என் மனைவியும் வெளியே பொய் விட்டு வந்தோம் .சாமி படங்களோடு என்  மனைவி படத்துக்கும் மாலை போட்டுட்டா .
---------------------------------------------------------------

ஒருவர் ;கல்யாணம் நடக்கனுமா ? வேணாமா .?
மணமகன் ; நடக்கனும் ஒருவர் ; நீ மேஜரா ? மைனரா ?மணமகன் ; மேஜர்தான் .
ஒருவர் ;அப்புரும் ஏன் ? மைனர் ஜெயின் கேட்குற பேசாமல் தாலியை கட்டு .
------------------------------------------------------------------------

மருத்துவர் ;நீங்க ரேசன் கடையில் வேலை பார்ப்பவரா ?
நோயாளி ;ஆமாங்க .
மருத்துவர் ;சுகர் குறைவா இருக்கு .அதுதான் கேட்டேன் .
---------------------------------------------------------------------

ஒருவர் ;இவர் எப்ப இருந்து ஊமை ஆகி விட்டார் .
மற்றவர் ;போன வாரம் கல்யாணம் ஆச்சு அதில் இருந்து ஊமையாகி விட்டார் .
-------------------------------------------------------------------------

ஒருவர் ; ஏன் ? இப்படி பேமுழி  முழிக்கிறிங்க .
மற்றவர் ;எங்க பேமிளியே இப்படிதான் முழிப்போம் .
-------------------------------------------------------------------------

ஒருவர் ;இந்தியாவை விட்டு போறான் அவன் பெயர் என்ன ?
மற்றவர் ; தெரியவில்லை .
ஒருவர் ;இந்துஸ்தான் லீவர் .
------------------------------------------------------------------------------

ஒருவர் ;இந்தியாவை விட்டு எப்பாவாவது போறான் அவன் பெயர் என்ன ?
மற்றவர் ; தெரியவில்லை .
ஒருவர் ;இந்துஸ்தான் லீவர் லிமிடட் .
------------------------------------------------------------------------

அப்பா ;என் மகன் ஒரு புத்தகப் புழு
நண்பர் ;அவன் நெளியரதைப் பார்த்தாலே தெரியுது .
----------------------------------------------------------------------------

அம்மா ; இந்த வீட்டில் நான் இருக்கனுமா ? அல்லது உன் மனைவி இருக்கனுமா ? நீயே முடிவு சொல்லு .
மகன் ;நீங்க ரெண்டு பேரும்  வேண்டாம் வேலைக்காரி இருந்தால் போதும் .

---------------------------------------------------------------------------

ஒருவன் ;உங்க அப்பா அடக்குமுறையா ?
மற்றவன் ;இல்லை அடங்கும் முறை
.
-----------------------------------------------------------------

ஒருவர் ;இளையராஜா சைனாவிற்கு  போனால் அங்கு அவர் பெயர் என்ன ?
மற்றவர் ;தெரியவில்லை
ஒருவர் ;யங் கிங் .
-------------------------------------------------------

அப்பா  ; என் மகன் பண்ண காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை .
நண்பர் ;அப்படி என்ன செய்து விட்டான் .
அப்பா  ; என் விக்கை அவன் போட்டுக் கிட்டு போயிட்டான் .
------------------------------------------------------------

ராஜ அடித்தால் சங்கு
 
போன் அடித்தால் ரிங்கு .
------------------------------------------------------

பாட்டி ; ஓடி ஒளிடா உங்க வாத்தியார் வருகிறார் .
பேரன் .நீ முதலில்
ஓடி ஒளி பாட்டி .நீ செத்து  போய்ட்டேன் சொல்லி லீவு போட்டேன் .

-----------------------------------------------------------------

ஒருவர் ;எங்க தலைவர் மைக்கே இல்லாமல் பேசுவார் .
மற்றவர் ;எங்க தலைவர் ஆளே  இல்லாமல் பேசுவார் .
------------------------------------------------------------

ஒருவர் ;ஓங்கி எத்தினால் மாட்டுத்தாவணியில் பொய் விழுவாய் .மற்றவர் ;கொஞ்சம் மெதுவா எத்துங்க சிம்மக்கல்லில் போய்  விழுகிறேன் .

------------------------------------------------------------------

சிறுவன் ;   தன் ஆட்காட்டி  விரலைக் காட்டி நீங்க குளிக்கும் போது இந்த விரல் நனையாது .
பெரியவர் ;அது எப்படி .
சிறுவன் ; நீங்க குளிக்கும் போது என் விரல் எதுக்கு நனையுது .

-----------------------------------------------------------------------------------



--

கருத்துகள்

  1. அருமை ஐயா.

    அன்புடன்,
    அமர்க்களம் கருத்துக்களம்,
    தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்,
    www.amarkkalam.net

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக