ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                      கவிஞர் இரா .இரவி
பறிக்குது மனம்
நீல வானம் 
நிலா வானம் !


பெறுவது அவலம் அன்று
திருவிழா இன்று
கடன் மேளா ?

லஞ்சம் தவிர்
நெஞ்சம் நிமிர்
வாசக
த்திற்குக் கீழ் லஞ்சம்  !

ஆறடி கூட
புதைக்கப்பட்டவனுக்கே
எரிக்கப்பட்டவனுக்கு ?

குணம் மாறி இருப்பான்
இன்று இருந்திருந்தால்
கர்ணன் !

வலை கட்டிக்
காத்திருந்தது பூச்சிக்காக
சிலந்தி !


தேவையற்றதை நீக்கிட
கிடைத்தது
சிலை !

நினைவிற்கு வந்தது
பரமபத பாம்புகள்
அரசியல்வாதிகள் !


வாழ்கிறார்கள்
மக்கள்
மனிதர்கள் ?

ஏவி என்ன பெருமை
ஏவுகணை நூறு
ஊழல் !

அமைதி நிலவியது
குடியும் கொடியும்
இல்லா கிராமம் !

விழுங்கி விட்டன
செல்பேசி கோபுரங்கள்
குருவிகள் !

ஒழுங்குபடுத்தப்பட்ட
ஓசை
இசை !




 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்