கோட்சேயை விடக் கொடியவன் ! கவிஞர் இரா .இரவி!

கோட்சேயை விடக் கொடியவன் ! கவிஞர் இரா .இரவி!
தமிழ் இனத்தின் அமைதிக் கொன்றவன்
அமைதி பற்றி பேசியுள்ளான் !

சகிக்க முடியாத போர்க் குற்றம் புரிந்தவன்
சகிப்புத் தன்மை பற்றி
பேசியுள்ளான் !

சாட்சிகளின்றி தமிழர்களைக் கொன்றவன்
சாஞ்சி நகரில் மூஞ்சி காட்டிஉள்ளான் !

புத்தர் பல்கலைக் கழகம் அடிக்கல் நாட்டிட
புரட்டனை அழைத்தது அவமானம் !

ஆசையே அழிவிற்கு காரணம் புத்தர்
அழித்து பேராசை  நிறைவேற்றியவன் !

வன்முறை கோரத் தாண்டவம் நடத்தியவன்
வன்முறை வேண்டாம் உபதேசம் செய்துள்ளான் !

பேரழிவை ஈழத்தில் நிகழ்த்தியவன்
பேரழிவு வேண்டாம் போதனை செய்துள்ளான் !

கொலைகாரனைப்  பார்த்தாலே உலகத் தமிழர்
உள்ளங்களில் பொங்குது வெறுப்பு !

பிரதமரும் குடியரசுத் தலைவரும்
கொலைகாரனை வரவேற்றுள்ளனர் !

தமிழர்களின் பகைவன் நண்பனா ?
தமிழர்களின் நெஞ்சில் தீ வைத்துள்ளனர் !

தமிழன் மறக்க மாட்டான் என்றும்
தேர்தலில்
தக்க பாடம் புகட்டுவான் !

கோட்சேயை விடக் கொடியவன்
காந்தி பெயரை உச்சரிக்கிறான் !


கருத்துகள்