பூரண மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .நாடு நலம் பெறும் .கவிஞர் இரா .இரவி

பூரண மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .நாடு நலம் பெறும் .கவிஞர் இரா .இரவி

பூரண மது விலக்கு வந்தால், நாடு நலம் பெறும் .கள்ளச் சாராயம் வந்து விடும்  என்று பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள் .குஜராத்தில் பூரண மது விலக்கு அமுலில்  உள்ளது .சட்டத்தை ,தண்டனையை கடுமையாக்கினால்  கள்ளச் சாராயம் ஒழித்து விடலாம் .முதல்வர் வசம் தான் காவல் துறை உள்ளது .இன்று குடியால் நாட்டில் கொலை, கொள்ளை என குற்றங்கள்  பெருகி விட்டது .பள்ளி மாணவன் சீருடையோடு சென்று குடிக்கிறான் .ஆசிரியர் குடிக்கின்றார்.பேராசிரியர் குடிக்கின்றார்,கணிப்  பொறியாளார்  குடிக்கின்றார் . வாகன ஓட்டுனர்கள் குடித்து விட்டு வந்து வாகனம்  ஓட்டி விபத்து ஏற்படுகின்றது .உயிர்கள் பலியாகின்றது .இரு சக்கர  வாகனத்தில்  சென்று மதுக்கடையில் மது அருந்தி  விட்டு வந்து குடி போதையில் .இரு சக்கர  வாகனத்தை ஓட்டி   விபத்து நேர்கின்றது .இன்று நடக்கும் குற்றங்ககளில்  80 % குடி போதையின் காரணமாகவே நடக்கின்றது என்று ஆய்வு சொல்கின்றது .குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பது முற்றிலும் உண்மை .மது விலக்கு உடனடி தேவை !மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .--
--

கருத்துகள்