உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !     கவிஞர் இரா .இரவி

குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த  குழந்தை
குழந்தைகளுக்கு  கல்வியோடு
உணவும் தந்த தந்தை

அன்னையைக்
கூட சென்னைக்கு அழைக்காதவர்
அரசுப் பணத்தை வீணாக்க விரும்பாதவர்
காமராசர்

நானில
ம்  போற்றிட தமிழகத்தில் ஆட்சிப் புரிந்தவர்
நேர்மையின் சின்னம் நாணயத்தின் மறுபெயர்  காமராசர்

கல்விப் புரட்சி  பசுமைப் புரட்சி  தொழில் புரட்சி
புரட்சிகள் பல புரிந்த  புரட்சியாளர்
காமராசர்

அணைகள் பல கட்டி விவசாயிகளை வளர்த்தவர்
பாலங்கள் பல கட்டி மக்களைக் காத்தவர் 
காமராசர்

முதல்வர் பதவி
யில் பெருமைகள்சேர்த்து முத்திரைப்  பதித்தவர்
முதல்வர்களில் முதல்வராய் திகழ்ந்தவர் காமராசர்

கருப்பு காந்தி என்று மக்களால் அழைக்கப் பட்டவர்
வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர்
காமராசர்

கதராடை மட்டுமே அவர் சேர்த்து வைத்த  சொத்து
கல்வி கற்பித்
தால்  கற்றவர்கள்  யாவரும் சொத்து

குப்பனும் சுப்பனும் கல்வி கற்றது அவராலே
உயர் பதவிகள் பெற்றதும் காமராசராலே

பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர்
பெரியாரே நேசித்த பச்சைத் தமிழர் காமராசர் 

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !   
உனக்கு நிகர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை !

கருத்துகள்