கோலம் ! கவிஞர் இரா .இரவி

கோலம்  !  கவிஞர் இரா .இரவி

கோலம் போடும் உந்தன்
கோலம் காண !
அதிக நேரம் தூங்கும் நான் 
அதிகாலை எழுந்தேன் !
உதய சூரியனை
உன்னால் பார்த்தேன் !
பனி மலரையும்
பார்த்து ரசித்தேன் !
நீயும் வந்தாய் !
கதவு திறந்தாய் !
கூட்டித் தள்ளினாய் !
வாசல் தெளித்தாய் !
புள்ளி வைத்தாய் !
கோலம் போட்டாய் !
கோலம் பார்த்தேன் !
கல்வெட்டாய்ப் பதிந்தது !
கன்னி உன் நினைவு !

கருத்துகள்