ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி

தமிழர்களை விட
சிங்களர் மீதே பாசம்
இந்தியா !

காற்றில் பறந்தது
இந்தியாவின் மானம்
ராணுவத்தில்  ழல் !

ஓழிக்க  முடியவில்லை
ழல்
ஒழிக்கலாமா ?
ழல்வாதிகளை !

காமராஜ் கக்கன்
காலத்தோடு முடிந்தது
அரசியலில் தூய்மை !

வாரிசு அரசியல்
ஓழிக்க வழி
வாரிசில்லாத் தலைவர் !

தோழி ஆதிக்கம் 
ஓழிக்க வழி
தோழி இல்லாத் தலைவி !
மாற்றினர்
தலைநகரை துக்ளக்
புத்தாண்டை அரசியல்வாதிகள் !


போதித்து
அமைதி
புத்தரின் சிலை !

புத்தரை வணங்கியும்
புத்திக் கெட்ட
இலங்கை !

இலைகள் உதிர்ந்தும்
நம்பிக்கையோடு மரம்
மழை வரும்  !

நீர் உயர
தானும் உயந்தது
தாமரை !


வழக்கொழிந்தது
கிராமங்களில்
குலவைச் சத்தம் !


நிலத்தையும்
மலடாக்கியது
மலட்டு விதை !

தனியாக செல்கையில்
துணைக்கு வந்தது
நிலா !
மரத்தை வாங்கியவன்
பிய்த்து எறிந்தான்
பார்வையின்
கூட்டை !  

பதட்டம் இல்லை
பற்றி எரிந்தும்
உள்ளது காப்பீடு  !

மாதவம் செய்து
மங்கையாகப் பிறந்து
குப்பைத் தொட்டியில் !

பணக்காரகளுக்கு அருகில்
ஏழைகளுக்கு தூரத்தில்
கடவுள் தரிசனம் !

இன்றும் வாழும்
கொடிய அரக்கன்
தீண்டாமை !

அத்திப்
பூத்தாற்ப் போல  
நல்லவர்கள்
காவல் துறையில் !

சும்மா இருப்பதாகஅறிமுகப் படுத்தினார்கள்
அனைத்து வேலை செய்யும்
அம்மாவை !   

இல்லம் அலுவலகம்
இரண்டிலும் வேலை
பெண்கள் !

கேட்டுப் பாருங்கள்
கவலை மறக்கலாம்
இசை !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்