மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை

வகித்தார் .முன்னிலை  வகித்த திருச்சி சந்தர் அவர்களின் 80 வது பிறந்த
நாளை முன்னிட்டு கவிஞர் இரா  .கல்யாண சுந்தரம் சார்பில் ஆசிரியர் பீட்டர்
சந்தன  மாலை அணிவித்தார் .கவிஞர் இரா. இரவி நினைவுப் பரிசு வழங்கினார்
.ஆசிரியர் மைகேல் பிரான்சிஸ் ,திரு ஜோதி மகாலிங்கம் ,திருG. ராம மூர்த்தி
, (SWEET ) அமைப்பு திரு. ராமலிங்கம்,திரு சரவணன்    ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினார்கள் .   கவிஞர்கள் விஸ்வநாதன் ,சிவ முருகன் கவிதை வாசித்தனர்
.தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பீட்டர் அருள்ராயன் எண்ணங்கள்
மேம்பட என்ற தலைப்பில்    தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார். சதுரங்க
விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களிடம் ,உங்களின் வெற்றிக்கு
என்ன ? காரணம் என்று கேட்டபோது ,நான் போட்டிக்கு முதல் நாளே கற்பனையாக
போட்டியாளருடன் விளையாடி வென்று விடுவேன் .அதுபோல நாமும் முதலில்
திட்டமிட்டு உழைத்தால் வெற்றி உறுதி .என்று பல வெற்றியாளர்களின் வெற்றி
ரகசியங்களை எடுத்துக்  கூறிப்    பயிற்சி அளித்தார் .திரு .தினேஷ் நன்றி
கூறினார் .வாசகர் வட்டத்தினர் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்
.விழாவிற்கான ஏற்பாட்டை  மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ
.எஸ் .ராஜா ராஜன் செய்து இருந்தார்.

கருத்துகள்