ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                           கவிஞர் இரா .இரவி

சிரித்தான் பிச்சைக்காரன்
சாலையோர வியாபாரி
கையேந்தும் காவலர் !

உண்மை
நுணலும் தன் வாயால் கெடும்
அரசியல்
தலைவர் !

வருந்தியது
மரம்
பிரிந்த இலைகள் !

பேசும் சிலை
நடக்கும் ஓவியம்
அவள் !

சிறகுகள் இருந்தும்
வானில் பறப்பதில்லை
வாத்து !

வேண்டா  வெறுப்பாக  
அபராத
த்திற்குப் பயந்து
தலைக்கவசம் !

பிடித்தால் மாட்டலாம்
பின்னால் மனைவியிடம்
தலைக்கவசம் !

கருத்துகள்