படித்ததில் பிடித்தது

நன்மையாய் விடியட்டும் நாளை!கவிதாயினி T.கார்த்திகா

தீபாவளி தட்டுகிறது
கதவுகளே
திறந்து கொள்ளுங்கள்!
சரவெடி எழுப்புது
இமைகளே
விழித்துக் கொள்ளுங்கள் !
 
சில்லென்ற நீரும்
எண்ணெய்   தலையும்
சிரிக்கிறதே
உடல் நடுக்கத்தைப் பார்த்து
சமையல் அறையும்
சமைக்கின்ற கைகளும்
ஓய்வின்றி
இயங்கிடுதே காலையில்
 
கோவில் மணி
இசைத்திட
கலர் கலர் ஆடையில் 
கூடிடும் கூட்டத்தில் 
நீ எங்கே சகியே!
 
மல்லிகை மலரின் 
வாசமாய் 
என்  அருகில் நீயிருக்க
நானெங்கே கண்மணியே!
 
 கூரை வீட்டிலும்
சென்று திரும்பும்
தென்றலே
என் வாழ்த்துக்களை
நண்பர்களிடம்
எடுத்துச்செல்லுங்கள்!
 
உண்மையான இதயங்களுக்கு
நன்மையாய் விடியட்டும்
நாளை!

கருத்துகள்