குறிஞ்சிப் பூக்கள்விமர்சனம் கவிஞர் இரா .இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12bbdfe7ddfcd19d&attid=0.4&disp=inline&realattid=f_gfeyfs4t3&zw
குறிஞ்சிப் பூக்கள்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் வீ.தங்கராஜ்




குறிஞ்சிப் பூக்கள், என்ற பெயருக்கு ஏற்றபடி உள்ளது கவிதைகள், மலரைப் பிடிக்காதவர்கள் யாருமில்லை. குறிப்பாக பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே அபூர்வமாக பூக்கும் அழகிய குறிஞ்சி மலர் போலவே கவதைகள் அற்புதமாக உள்ளன. சிலருக்குத்தான் கவிதை எழுதத் தெரியும். வெகுசிலருக்குத்தான் எழுதிய கவிதைகளை நூலாக்கும் துணிவும், வசதியும் வாய்க்கும். படைப்புலகில் தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளி நூலாசிரியர் கவிஞர் வீ.தங்கராஜ் இனிய படைப்பாளி. அது போல நூலாசிரியரும் இலக்கியதாகம் கொண்டு செயல்பட்டு வருபவர். இவருக்கு காரணப்பெயர் என்றே கருதுகின்றேன். தங்கமான கவிதைகளைப் படைப்பதில் இவர் இராசா என்ற காரணத்தால் தான் இவருக்கு இவரது பெற்றோர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் தங்கராஜ் என பெயரிட்டார்களோ? என எண்ணுகின்றேன். கலைமாமணி கவிப்பேரரசு டாக்டர் பழனி இளங்கம்பன் அவர்கள் மரபுக்கவிதையும் அருவியாக கொட்டுவார். ஹைக்கூ கவிதையும் சிற்பம் போல செதுக்குவார். பல்துறை வித்தகரின் அணிந்துரை இந்நூலுக்கு மகுடம் போல உள்ளது. முனைவர் கவிஞர் சிற்பி. பால சுப்பிரமணியன் பாராட்டுரை அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நூலாசிரியருக்கு கிடைத்து இருப்பதே நூலிற்கு அணி சேர்க்கின்றது. திருநாவுக்கரசரையே மகனாகப் பெற்றவர் நூல் ஆசிரியர். அதனால் தமிழ்மொழிப் புலமை குற்றலா அருவியாகக் கொட்டுகின்றது. நூலைப் பதிப்பித்த அன்னை இராஜேஸ்வரி பதிப்பக உரிமையாளர் கவிஞர் பா. உதயக்கண்ணன் அவர்களின் தொகுப்பு நூ�லால் வெளிச்சத்திற்கு வந்த பலரில் நானும் ஒருவன். பதிப்புப் பணியினை தொழிலாகச் செய்யாமல் சேவையாகச் செய்திடும் நல்ல மனிதர். பொதுவாக ஒரு கவிஞர் தனது கவிதைகளை நூலாக வெளியிடுகிறார் என்றால் கண்டனக்குரல் முதலில் குடும்பத்தில் தான் ஒலிக்கும். ஆனால் நுலாசிரியருக்கு விதி விலக்காக நூல் வடிவம் பெற குடும்பத்தினர் காட்டிய ஆர்வத்தையும் அக்கறையையும் என்னுரையில் அழகாக பதிவு செய்துள்ளார்கள். அவருடைய குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக திகழ்கின்றது. நவீன யுகத்தில் மனிதன் புறத்தில் வளர்ச்சி அடைந்து விட்டான். ஆனால் அகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறான் என்பதை விளக்கும் அழகிய ஹைக்கூ மனிதனுக்குள் மிருகம் நல்ல வேளை மிருகத்துக்குள் மனிதன் இல்லை மரபுக் கவிதைகளில் தமிழ்மொழி, திருக்குறள், பாரதி பற்றி பல்வேறு கவிதைகள், என்னவளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன்? கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் என்பதைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. மூவடி முப்பது என்ற தலைப்பில் 3 பகுதியாக உள்ள 90 ஹைக்கூகளும் படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன. எண்ண அலைகளை உருவாக்குகின்றன. அது தான் நூலின் வெற்றி உண்மையில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. ஏழ்மையை விளக்கும் காட்சிப்படுத்தும் உன்னத ஹைக்கூ. குப்பையைக் கிளறுவது கோழியல்ல கோணியுடன் சிறுவன் இன்றைய தேர்தல் விதிகளும். ஆனால் நாட்டில் நடைபெறும் நடைமுறைகளும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனை எள்ளல் வகையில் விளக்கிடும் ஹைக்கூ. தேர்தல் கமிஷன் பெயரே சரியில்லை தேர்தலுக்குப்பின் எல்லாமே கமிஷன் மயம் நூலாசிரியர் ஆசிரியராக இருப்பதால் மொழி வளம் குன்றாமல் உள்ளது. நயாகரா அருவியென கொட்டுகின்றது. குறிஞ்சிப்பூக்கள் என்று நூலிற்கு 12 வருடங்கள் ஆக்காமல் உடன் அடுத்த நூலைத் தாருங்கள் காட்டு கடைவிழி குமரேசா என்று தொடங்கி கர்ப்பிணி பெண் போலகவிதைக்கரு தமக்கும் கவிஞன் பிரசவ எதிர்பார்ப்புடன் ஹைக்கூ கவிதை வரை அனைத்து கவிதைகளும் அற்புதமாக வருகின்றது. ஹைக்கூ கவிதை இன்று பரவலாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று எல்லோராலும் விரும்பப்பட்டு பலர் இன்று ஹைக்கூ எழுதி வருகின்றனர். ஹைக்கூ கவிதை ஒன்றுக்குத்தான் படிக்கும் வாசகனையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் உண்டு. மரபு அறிந்த கவிஞர்களான நூலாசிரியர் வீ.தங்கராஜ் பழனி இளங்கம்பன் ஆகியோர் ஹைக்கூ வடிக்கும் போது அதில் ஆழம் மிக அதிகமாகவே உள்ளது. சொற்கள் நடந்தால்த வசனம் சொற்கள் நடனமாடினால் கவிதை. இந்த நூலில் சொற்கள் களி நடனமாகின்றன. தேவையற்ற சொற்கள் எதுவுமில்லை.கடலில் மூழ்கி முத்து எடுப்பதைப் போல தமிழ்க்கடலில் மூழ்கி சொற்களை எடுத்து கவிதை முத்துக்களைக் கோர்த்து பாமாலை தந்து இருக்கிறார்.த ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் மரபும் உள்ளது. ஹைக்கூவும் உள்ளது. பழமையும் உள்ளது. புதுமையும் உள்ளது. கவிதை நேசர்களால் நேசிக்கப்படும் நூலாக உள்ளது

கருத்துகள்