"பெரியாரை புரிந்து கொள்வது சாதாரணமான விஷயம் கிடையாது. அவர் எப்போதும் நம்மை மேம்படுத்துவதற்கான விஷயங்களையே சொல்லி இருக்கிறார். இன்னும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நன்றாக பேச கற்றுக்கொள்ளலாம். பின்பு அவரையே எதிர்த்து பேசலாம். அதற்கு நீங்கள் கைதட்ட ஆரம்பிப்பீர்கள். உடனே எனக்கு நாடி நரம்பெல்லாம் புடைக்க ஆரம்பிக்கும். இன்னொன்று அவர்களை பற்றி பேசும் போது மட்டும் தான் நீங்கள் பெரிய ஆளாக முடியும். ஆசானை மீறுவது என்ற ஒன்று உண்டு. ஆனால் ஆசானை மீறுவது என்பது ஆசானை குறை சொல்லி அல்ல, ஆசான் உங்களை பாராட்ட வேண்டும். `என்னை விட பெரிய இயக்குநர் ஆக வேண்டும். அப்போதுதான் நான் உனக்கு சரியாக கற்றுக் கொடுத்திருக்கிறேன் என அர்த்தம்' என ராம் சார் என்னிடம் சொல்வார்.
எனவே நான் பெரியாரை விட மிகசிறந்த சிந்தனையாளன் என என்னை நிரூபிக்க வேண்டும் என்றால் பெரியாரை திட்டி நிரூபிக்க கூடாது. பெரியாரின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இயங்குவதே செய்ய வேண்டியது. எதை மக்களிடம் சேர்க்கிறோம் என்பது மிக முக்கியமானது. வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் கொடுப்பது சாதனை கிடையாது. எல்லாவற்றையும் இணைப்பது. அது ஜெயிப்போமா, தோற்போமா என்று தெரியாத யுத்தம். ஆனால் சாகும் வரை அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தீர்கள் என்பதே உங்கள் வாழ்வின் உன்னதமான நிலை. அந்த உன்னத நிலை தான் பெரியார் என புரிந்து கொண்டேன் நான்"
- மாரி செல்வராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக