30.11.2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம்- 40
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
" இமையத்தில் இருக்கும் இனியமொழி தமிழ் " எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. வீர அதிசிவத்த தென்னவன் வரவேற்றார் , துணைத் தலைவர் முனைவர் இரா வரதராஜன் முன்னிலை வகித்தார் .
.
செயலர் கவிஞர் இரா .இரவி தலைமையில் ,கவிஞர்கள் ,இரா . கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராஜன், கு கி .கங்காதரன் ,புலவர் மகா .முருகுபாரதி , கி .கோ .குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன், ச. லிங்கம்மாள்,பா .பொன் பாண்டி , பா .பழனி,முனியாண்டி , ந ..சுந்தரம் பாண்டி ,மா .பரமானந்தம் , இரா .நீலமணி வண்ண கண்ணன் ,அவரது மனைவி கி .காயத்ரி , முனைவர் பா .ஸ்ரீவித்யா பாரதி ,ஆகியோர் கவிதை பாடினார்கள்.
பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் ந .சுந்தரம் பாண்டி , கி .காயத்ரி இருவருக்கும் பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்கள் . பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
பார்வையாளராக த.மு .எ.க .ச பொறுப்பாளர் சு .பாலசுப்ரமணியன் ,தாய் பயிற்சி மையம் மோகனக்கண்ணன்,ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்
கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
படங்கள் புகைப்படக் கலைஞர் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.























































கருத்துகள்
கருத்துரையிடுக