தசிஎகச
33 வது கிளை துவக்க விழா
29 8 2025 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். மதுரை மாநகர் துவக்க விழா நடைபெற்றது.
மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
Amudha Chris , Kavikuyil Ganesan , புகைப்படக்கலைஞர் கனகமஹால் கார்த்திக்கேயன் , Kavingar Chella,@ கவிஞர் அருட்தந்தை ஞான ஆனந்தராஜ் ,Ambika Sankaranarayanan, LDC பேராசிரியர் திருமிகு வெண்முகில் , முனைவர் பட்ட ஆய்வாளர் திருமிகு ஜெஸ்பா பவுலின் மற்றும் பல குழந்தைகள் நல ஆர்வலர்கள் , பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர் .அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
நிகழ்ச்சியில் சட்டக்கல்லூரி மாணவி Thamizhinii Maruthupandian வரவேற்புரையாற்றி அனைவரையும் வரவேற்றார்.
பெரியார் நெறியாளர் , மணியம்மை மழலையர் துவக்கப் பள்ளியின் தாளாளர் திருமிகு வரதராசன். பி. திக அவர்கள் முன்னிலை வகித்து விழாவிற்கு நோக்க உரையாற்றினார். “ இது நம் பள்ளி குழந்தைகளுக்காக நம்பள்ளியை எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் “ என்று கூறியது எனக்கு உற்சாகத்தை அளித்தது .
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு கா. உதயசங்கர் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள்.
கல்வித் துறையைச் சேர்ந்த திருM Murugan பத்மபாதன் மா. முருகன் அவர்கள் சிறப்புரையாற்ற வாழ்த்துரையை தமிழ்ச் செம்மல் கவிஞர் R Ravi Ravi இரா .இரவி அவர்கள் வழங்கினார்கள்.
நிர்வாகிகளை மாநில செயற்குழு உறுப்பினர் சிவா கலகலவகுப்பறை அவர்கள் முன்மொழிந்தார்கள் .
தலைமையாசிரியர் குழந்தை செயற்பாட்டாளர் Saravanan Madurai அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .
குழந்தைகள் மாறுவேடம் அணிந்து கதை சொல்லியதும் பாடல்கள் பாடியதும் விழாவை கூடுதல் சிறப்பாக்கியது.
விழாவில் இறுதி நிகழ்ச்சியாக பள்ளி மாணவன் வி .ஆ .சான்றோன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி மு சுலைகா பானு நஜூமுதீன் , உலக சாதனை நல்லாசிரியர் செய்திருந்தார்.
துவக்க விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக ச.நஜூமுதீன்
செயலாளராக மு. சுலைகா பானு
பொருளாளராக துளிர் கவிஞர் துளிர்
ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


























கருத்துகள்
கருத்துரையிடுக