படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி
✡️மனைவியை ஒய்ஃப் என்றோம்....
🟡வாழ்க்கையை லைஃப் என்றோம்.....
🔵கத்தியை நைஃப் என்றோம்.....
🟡புத்தியை புதைத்தே நின்றோம் !
🟢அத்தையை ஆன்ட்டி என்றோம்....
🔴அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.....
🟡கடமையை டுயூட்டி என்றோம்.....
🟢காதலியை பியூட்டி என்றோம்!
🟠காதலை லவ்வென்றோம்..
🔴பசுவை கவ்வென்றோம்..
🔵ரசிப்பதை வாவ் என்றோம்......
🟢இதைதானே தமிழாய் சொன்னோம்!
🟠முத்தத்தை கிஸ் என்றோம்..... பேருந்தை பஸ் என்றோம்.....
🔵அளவை சைஸ் என்றோம்......
🟠அழகை நைஸ் என்றோம் !
🔴மன்னிப்பை சாரி என்றோம்.....
🔵புடவையை சேரி என்றோம்.....
🟢ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம்.....
🟠தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!
🔴மடையனை லூசு என்றோம்.....
🟢வாய்ப்பை சான்சு என்றோம்.....
🟡மோகத்தை ரொமான்ஸ் என்றோம்.....
🟢தமிழை அறவே மறந்தோம்!
🟠அமைதியை சைலன்ஸ் என்றோம்.....
🔵சண்டையை வயலன்ஸ் என்றோம்.....
🔴தரத்தை ஒரிஜினல் என்றோம்......
✡️தாய் மொழியை முழுதும் கொன்றோம்..! 🤨

கருத்துகள்
கருத்துரையிடுக