படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி
*உதடு* *ஒட்டாத* *குறள்கள்* *மொத்தம்* *எத்தனை* ❓
சரியான விடை *24*
உதடு ஒட்டாத குறட்பாக்கள்.
குறிப்பாக *யாதனின் யாதனின் நீங்கியான்*
என்று குறளைக் கூறுவார்கள்..
ஆனால் உதடு ஒட்டாத திருக்குறள் மொத்தம் *24* உள்ளன.
*208, 240, 286, 310, 341, 419, 427,*
*472, 489, 516, 523, 678, 679, 894,*
*1080, 1082, 1177, 1179, 1211, 1213,*
*1214, 1236, 1286, 1296.*
*குறள்: 208.*
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.
*குறள்: 240.*
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.
*குறள் : 286.*
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
*குறள் 310:*
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
*குறள் 341:*
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
*குறள் எண் : 419.*
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
*குறள் 427:*
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
*குறள் 472:*
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
*குறள் 489:*
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
*குறள் 516:*
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
*குறள்: 523.*
அளவளா வில்லாதான்
வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
*குறள் : 678*
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
*குறள்: 679.*
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
*குறள் 894:*
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்.
*குறள்: 1080.*
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
*குறள் 1082:*
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து.
*குறள்: 1177.*
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
*குறள் 1179:*
வாராக்கால் துஞ்சா
வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
*குறள்: 1211.*
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
*குறள் 1213:*
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
*குறள் 1214:*
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
*குறள்: 1236.*
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
*குறள் 1286:*
காணுங்கால் காணேன்
தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
*குறள்: 1296.*
தனியே இருந்து
நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.
🙏🏻

கருத்துகள்
கருத்துரையிடுக