மனது சிலைடு அல்ல கவிஞர் இரா .இரவி.
மறந்துவிட்டேன் என்று
சொல்ல உனக்கு உரிமை உண்டு
மறந்துவிடு என்று
சொல் உனக்கு உரிமை இல்லை
உன் உதடுகள்தான்
மறந்துவிட்டேன் என்கின்றது
உள்ளம் ஒருபோதும் சொல்லாது
என்பதை நான் அறிவேன்
என்னை நீ மறந்துவிடு
என்று சொன்னபிறகுதான்
மறக்கமுடியாமல் தவிக்கின்றேன்
மனது சிலைடு அல்ல
நினைத்ததும் அழிப்பதற்கு
மனதில் கல்வெட்டாகப்
பதிந்தது உன் நினைவு
கருத்துகள்
கருத்துரையிடுக