படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.
எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்!
ஏமாற மறுக்கிறோம் நாங்கள்!
*அசோகர் என்றொரு பேரரசன்* வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது!
*பிரின்ஸ் பிரின்செப் (James Prinsep)* என்ற வெள்ளைக்காரன் வரும்வரை!
ஒரு *ஜான் மார்ஷல் (John Marshall)* வந்து *சிந்துவெளி நாகரிகம்* பற்றி அறிவிக்கும் வரை
*நீங்கள் சொன்ன பொய்களே* இந்நாட்டின் வரலாறு!
*கால்டுவெல் (Caldwell)* வந்து பிராகுயி மொழி உள்ளிட்ட *திராவிட மொழிக் குடும்பம்* பற்றி பேசும் வரை
நம்மைப் பற்றிய நமது புரிதல் வேறு!
*தேவ மொழி* என்ற கதையை நாங்கள் ஒப்புக்கொள்ள மறுத்ததும்
*உடுக்கையின் மறுபுறம் பிறந்தமொழி* என்று கதை சொன்னீர்கள்!
*சிந்துவெளி, சங்க இலக்கியம், கீழடி ஆதிச்சநல்லூர்* தரவுடன் நாங்கள் வருகிறோம்!
"*எங்கே அமர்ந்து பேசலாம்* என்று நீங்கள் சொல்லுங்கள்!
சங்க இலக்கியம் பேசிய *பகடையை* *சிந்துவெளியிலும் கீழடியிலும்* நாங்கள் காட்டுகிறோம்!
*மகாபாரதப் பகடையை* நீங்கள் காட்டுங்கள்!
வரலாறு என்பது
வந்த வழி பற்றிய கேள்விகளுக்கான விடை!
வாயில் சுடும்
வடை அல்ல!
*அதே ஆட்டம்
அதே பகடை
உருள்வது ஆடுபவன்
தலை அல்ல!*
*ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.
கருத்துகள்
கருத்துரையிடுக