படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்! ஏமாற மறுக்கிறோம் நாங்கள்! *அசோகர் என்றொரு பேரரசன்* வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது! *பிரின்ஸ் பிரின்செப் (James Prinsep)* என்ற வெள்ளைக்காரன் வரும்வரை! ஒரு *ஜான் மார்ஷல் (John Marshall)* வந்து *சிந்துவெளி நாகரிகம்* பற்றி அறிவிக்கும் வரை *நீங்கள் சொன்ன பொய்களே* இந்நாட்டின் வரலாறு! *கால்டுவெல் (Caldwell)* வந்து பிராகுயி மொழி உள்ளிட்ட *திராவிட மொழிக் குடும்பம்* பற்றி பேசும் வரை நம்மைப் பற்றிய நமது புரிதல் வேறு! *தேவ மொழி* என்ற கதையை நாங்கள் ஒப்புக்கொள்ள மறுத்ததும் *உடுக்கையின் மறுபுறம் பிறந்தமொழி* என்று கதை சொன்னீர்கள்! *சிந்துவெளி, சங்க இலக்கியம், கீழடி ஆதிச்சநல்லூர்* தரவுடன் நாங்கள் வருகிறோம்! "*எங்கே அமர்ந்து பேசலாம்* என்று நீங்கள் சொல்லுங்கள்! சங்க இலக்கியம் பேசிய *பகடையை* *சிந்துவெளியிலும் கீழடியிலும்* நாங்கள் காட்டுகிறோம்! *மகாபாரதப் பகடையை* நீங்கள் காட்டுங்கள்! வரலாறு என்பது வந்த வழி பற்றிய கேள்விகளுக்கான விடை! வாயில் சுடும் வடை அல்ல! *அதே ஆட்டம் அதே பகடை உருள்வது ஆடுபவன் தலை அல்ல!* *ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

கருத்துகள்