உலக ஹைக்கூ தின நல்வாழ்த்துகள். ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

உலக ஹைக்கூ தின நல்வாழ்த்துகள். ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வருத்தத்தில் விவசாயி மகிழ்வில் மணற்கொள்ளையர் வறண்ட ஆறு !/ அழுகை நிறுத்தியது குழந்தை சவ் மிட்டாய்காரனின் கை தட்டும் பொம்மை !/ சுவை அதிகம் பெரிதை விட சிறிது வெள்ளரிப்பிஞ்சு !/ பத்துப்பொருத்தம் இருந்த இணைகள் மணவிலக்கு வேண்டி !/ சொத்துக்களில் சிறந்த சொத்து தன்னம்பிக்கை !/ அன்று சமற்கிருதம் இன்று நீட் தேர்வு அவாள் சதி !/ திரும்பக் கிடைக்காது வீணாக்கிய வினாடிகள் !/ பிறரை நேசிக்கும் முன் முதலில் உன்னை நேசி !/ தேடி வராது தேடிச்செல் வாய்ப்பு !/ வருடங்களானலும் மறக்காது உயிர் காக்கும் கற்ற நீச்சல் !/ சம்பாதிக்கும் அப்பா 300 ரூபாய் படிக்கும் மாணவன் 3000 ரூபாய் காலணி ! / போட்டியாளர்கள் அகற்றவேண்டியது தோல்வி பயம் !/ பிறருக்கு வழங்கினால் நமக்கும் வளரும் தன்னம்பிக்கை !/ அறிவது அழகு ஆடம்பரம் அழிவு அடக்கம் உயர்வு !/ . ஆசையை அழிக்கச் சொன்ன பூமியில் பேராசை !/ குடை விரித்தது மழை நின்றதும் காளான் !/ வருமானம் அல்ல அவமானம் மதுக்கடை !/ நேரம் விழுங்குகிறது அன்று தொலைக்காட்சி இன்று அலைபேசி !/ நடிகராக மட்டும் பாருங்கள் நடிகவேள் வேண்டுகோள் ! / பூனையில் சைவம் இல்லை பசுவில் அசைவம் இல்லை இயற்கையின் இயல்பு !/ பூமியை முடித்து நிலவை ஆராய்கிறான் சுரண்டிட மனிதன் !/ தேவைப்பட்டது தண்ணீர் செயற்கை மலர்களுக்கும் தூசி கழுவ !/ இரை தேடித் செல்லும் மீனவன் இரையாகிறான் சிங்கள ஓநாய்களுக்கு ! / வயிற்றுப் பிழைப்பு முயற்சியில் மீனவர்கள் உயிர் பறிப்பு இலங்கை இராணுவம் !/ பார்த்தாலே எச்சில் ஊறும் மாங்காய் !/ தானாக உதிரவில்லை உதிர்த்தது காற்று இலைகளை !

கருத்துகள்