இரண்டு நாடுகள் மகிழ்வாகப் பகிர்கின்றன !

உலக தண்ணீர் தினம் .22.3.2014 . தண்ணீரை பார்க்கும் விழியாக மதிப்போம் !கவிஞர் இரா .இரவி ! இரண்டு நாடுகள் மகிழ்வாகப் பகிர்கின்றன ! இரண்டு மாநிலம் பகிர்வதில் சண்டை ! இயற்கையின் அன்பளிப்பு தண்ணீர் ! இனிதே உயிர் வாழத் தேவை தண்ணீர் ! ஏழைகளின் அவசர உணவு தண்ணீர் ! பணக்காரகளின் கைகளில் தண்ணீர் ! வள்ளுவன் உரைத்தான் அன்றே !நன்றே ! உணவாகவும் உணவு விளைவிக்கவும் தண்ணீர் ! அடிப்படைத் தேவைகளில் முதன்மை தண்ணீர் ! அத்தியாவசிய அவசியம் அனைவருக்கும் தண்ணீர் ! தாகம் தணிக்கும் உயர்ந்த உணவு தண்ணீர் ! தேகம் கழுவிட உதவிடும் தண்ணீர் ! ஆரோக்கியம் பேணிட வேண்டும் தண்ணீர் ! அனைவரின் உயிர் காப்பது தண்ணீர் ! முனிவரும் துறக்க முடியாது தண்ணீர் ! இனிவரும் காலம் காக்க வேண்டும் தண்ணீர் ! காலையில் மறக்காமல் அருந்துக தண்ணீர் ! காணமல் போக்கும் நோயை தண்ணீர் ! உணவு இன்றி கூட உயிர் வாழ்ந்திடலாம் ! தண்ணீர் இன்றி உயிர் வாழ்வது கடினம் ! உலக யுத்தம் வரும் தண்ணீருக்காக என்று உளறுகின்றனர் சித்தம் கலங்கி ! இனி உலக யுத்தம் வரவே வராது ! இனி வரவும் கூடாது வர விடக் கூடாது ! உலக யுத்தத்தால் அடைந்த இன்னல் போதும் ! உலகில் அமைதி நிலவிட வேண்டும் ! வருங்கால சந்ததிகளுக்கும் வேண்டும் தண்ணீர் ! வீணாக விரயம் செய்திட வேண்டாம் தண்ணீர் ! தண்ணீரை பார்க்கும் விழியாக மதிப்போம் ! தண்ணீரை வாரிசுகளுக்கும் விட்டுச் செல்வோம் !

கருத்துகள்