தமிழராய்ப் பார்த்து திருந்தா விட்டால் தமிழை வளர்க்க முடியாது !கவிஞர் இரா .இரவி !

தமிழராய்ப் பார்த்து திருந்தா விட்டால் தமிழை வளர்க்க முடியாது !கவிஞர் இரா .இரவி ! இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் இனிய தமிழில் பேசிக் கொள்ளுங்கள் ! தமிங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் தமிழரோடு உரையாடி மகிழுங்கள் ! உலகின் முதல் மொழிக்காரன் தமிழன் உணரவில்லை தாய்மொழியின் சிறப்பை ! மதம் பரப்ப வந்த சி .யு .போப் கூட மனம் மாறி தமிழ்ப் பரப்பி வாழ்ந்தார் ! அமெரிக்காவின் மொழி ஆய்வாளர்கள் அனைவரும் சொல்கின்றனர் தமிழே முதல் ! மற்றவர்கள் அறிந்திட்ட தமிழின் அருமை மறத்தமிழன் இன்னும் அறியாதது வேதனை ! கடவுளின் கருவைறையில் தமிழ் ஒலிக்க வேண்டும் கற்கண்டுத் தமிழ் கடவுளுக்குப் புரியாதா கேட்க வேண்டும் ! உயர்நீதி மன்றங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும் உன்னத மொழிக்கு உரிய இடம் தந்திட வேண்டும் ! ஆரம்பக்கல்வி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் அவசியம் இது சட்டத்தால் கட்டாயமாக்கப்பட வேண்டும் ! அங்காடிகளில் பலகைகளில் தமிழ் இருக்க வேண்டும் அன்னைத் தமிழை அரியணை ஏற்றிட வேண்டும் ! நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த மொழிகள் நாடறிய கூத்தாட்டம் போட்டு மகிழ்கின்றன ! தமிழா நீ தூங்கியது போதும் இனியாவது விழி தமிழ் மொழி காக்க அணி வகுப்போம் !

கருத்துகள்