ிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று. கவிஞர் இரா .இரவி !

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று. கவிஞர் இரா .இரவி ! உலக மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி பேசும் தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழர் அனைவரும் பெருமை கொள்வோம் ! தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி. ****** தமிழ்மொழி பற்று கொள் உன்னை உயர்த்தும் தமிழ்மொழிக்கு வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றலுண்டு! எந்த மொழியும் கற்றுக்கொள் தமிழ் மீது பற்றுக்கொள் எந்த மொழியும் நமது தமிழ்மொழிக்கு ஈடாகாது! ஒழுக்கம் கற்பிக்கும் உயர் தனிச் செம்மொழி உயர்ந்த பண்பாடு பயிற்றுவிக்கும் பண்டைத் தமிழ்! தமிழ்மொழிப்பற்று நெஞ்சத்தில் நீங்காது இருந்தால் தமிழ்க்கொலையை என்றும் நீ அனுமதிக்க மாட்டாய்! தமிழா நீ பேசுவது தமிழா? காசி ஆனந்தன் வரிகளை தமிழா நீ நினைத்துப் பார்த்து நீக்கிடு தமிங்கிலம்! பிறமொழி கலந்து பேசுவதும் எழுதுவதும் குற்றம் பைந்தமிழைச் சிதைப்பது முறையோ? தகுமோ? தமிழை தமிழாகப் பேசிட தமிழருக்குத் தெரியவில்லை தமிழர் தவிர மற்றவர் தாய்மொழிப் பற்றுடன் உள்ளனர் மலையாளியும் மலையாயும் மலையாளத்தில் பேசுகின்றான் மடையன் தமிழன் தான் ஆங்கிலத்தில் பேசுகின்றான் ஆங்கிலத்தில் பேசுவது பெருமையென்று கருதுகின்றான் ஆங்கிலத்திற்கும் மூத்த மொழி தமிழ் உணர் மறுக்கிறான்! உலகமொழி ஆங்கிலம் அல்ல தமிழ் என்பதை உணர் உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ் உணர்! வைரக்கல்லை வெறுங்கல் என்பது சரியா? வளமான தமிழை மதிக்காமல் இருப்பது முறையா? கூழாங்கல்லை வைரமென்று உரைப்பது பொய்யே கூறுகெட்டதனமாக வடமொழியைக் கொண்டாடுவது பிழையே! ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளுக்கும் சொற்களை அள்ளி வழங்கிய ஒரே மொழி ஒப்பற்ற தமிழ்! மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சொன்ன ஆய்வை மொழி ஆய்வாளர்கள் முன்மொழிகின்றனர் முதல்மொழி தமிழ்! அமெரிக்காவின் ஆய்வாளர் உரைக்கின்றார் சேருங்கள் அனைத்து மொழிகளுக்கும் முதல்மொழி அன்னைத் தமிழ்மொழி! அயலவர் உணர்ந்து உள்ளனர் தமிழின் அருமையை அருமைத்தமிழா! தமிழ்மொழிப் பற்றுகொள் உயர்வாய் நீ! தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி. ****** தமிழும் நானும் நகையும் சதையும் போல தமிழ் குருதியில் ஒன்றாகக் கலந்திட்ட உறவு! தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன் துக்கம் விரட்டிடும் ஆற்றலுண்டு தமிழுக்கு ! தமிழ் படித்தவர்களுக்கு வாழ்நாள் நீளும் தமிழுக்கு வாழ்விக்கும் திறமை உண்டு! தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன் தரணியின் முதல்மொழி எந்தன் தாய்மொழி! அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நமது அண்ணால் தமிழனாகப் பிறக்க விரும்பினார் ! மாவீரர் நேதாசியும் அடுத்தபிறவி இருந்தால் மண்ணில் தமிழனாகப் பிறக்க விரும்பினார்! தமிழின் அருமை பெருமை தரணி அறிந்தது தமிழன்தான் பெருமையை அறியாமல் இருக்கிறான் ! அரசுப்பள்ளியில் பயின்றதால் எனக்கு தமிழ்ப்பற்று உள்ளது ஆங்கிலப்பள்ளியில் பயின்று இருந்தால் தமிழ்ப்பற்று இருக்காது! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் புரட்சிக்கவிஞர் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்பேன் நான் ! அமுதம் வேண்டுமா? தமிழ் வேண்டுமா? என்றால் அமுதம் வேண்டாம் தமிழ் வேண்டும் என்பேன் ! பெற்ற தாய்க்கு அடுத்து நேசிப்பதை தமிழை பெற்ற தாய் தடுத்தாலும் தமிழ்ப்பகையை விடுவதில்லை ! தமிழுக்காக எழுதியும் பேசியும் வருகிறேன் தமிழுக்காக தேவைஎன்றால் உயிரையும் தருவேன் ! தமிழன்னையை அரியணையில் ஏற்றி மகிழ்வேன் தமிழே எந்தன் உயிர் மூச்சு என்பேன் உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி கவிஞர் இரா.இரவி இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி! சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! கவிஞர் இரா .இரவி ! சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று சொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் ! உலகின் முதல் மொழி தமிழ் என்று உரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் ! உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள் உன்னத தமிழ் மொழியில் ஏராளம் ! அடுக்கு மொழியில் அள்ளி விட சொற்கள் ஆயிரக்கணக்கில் அழகு தமிழில் உண்டு ! தமிழ் !தமிழ் !தமிழ் ! என்று உச்சரித்துப் பாருங்கள் அமிழ்து ! அமிழ்து ! என்று ஒலி கேட்கும் ! முத்தமிழுக்கும் மகுடமாக விளங்குவது சொற்கள் முக்காலமும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி ! ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு ஒரு சொல் கூட பொருள் இன்றி இல்லை ! ஓர் எழுத்து சொல்லுக்கும் பொருள் உண்டு இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் உண்டு ! உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து மூவகை எழுத்துக்களின் சுரங்கம் தமிழ் மொழி ! பிறமொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி பிறக்கும்போதே சிறப்போடு பிறந்த மொழி ! பன்மொழி அறிஞர்கள் பாராட்டும் தமிழ்மொழி பன்னாட்டு அறிஞர்கள் போற்றிடும் தமிழ்மொழி ! உலக உயிரினங்கள் உச்சரிக்கும் அம்மா தமிழ் உலகமே போற்றிடும் உன்னத மொழி தமிழ்மொழி ! தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள் – கவிஞர் இரா.இரவி தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள் தனிப்பெரும் இடம்பெற்ற இலக்கியம் திருக்குறள் தமிழ் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள் தமிழன் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள் கடவுள் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள் கற்கண்டை மிஞ்சும் கனிச்சுவை மிக்க திருக்குறள் வாழ்வியல் நெறியை பயிற்றுவிக்கும் திருக்குறள் வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் திருக்குறள் உலக இலக்கியங்களின் உன்னதம் திருக்குறள் உலகிற்கு அறநெறி அறிவிக்கும் திருக்குறள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் உலக மக்கள் யாவரும் அறிந்த திருக்குறள் அழியாப் பெருமையுடன் நிலைத்திருக்கும் திருக்குறள் அறியாமை நீக்கிடும் அறிவுடைமை திருக்குறள் மனிதநேயம் மனத்தில் விதைக்கும் திருக்குறள் மடமை நீக்கி பகுத்தறிவைப் போதிக்கும் திருக்குறள் ஈடு இணையற்ற இனிய இலக்கியம் திருக்குறள் எண்ணிலடங்கா கருத்துப் புதையல் திருக்குறள் காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்ற அறிஞர் டால்ஸ்டாயின் குரு செந்நாப்புலவர் திருக்குறள் சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள் சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள் தமிழுக்கும் செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள் தமிழருக்குப் பெருமை ஈட்டித் தந்த திருக்குறள் ! திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும் தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள் நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள் உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள் ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள் முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள் அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள் ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள் ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள் மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள் மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள் மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள் மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள் மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள் அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள் அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள் உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள் உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள் உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள் இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும் அன்பும் அறனும் அவசியம் வேண்டும் உயர்ந்த தவத்தை விட சிறந்தது ஒழுக்கமாக இல்லறத்தில் வாழ்வது பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி பிறர் போற்றும் வாழ்க்கை இல்லறம் பூ உலகில் செம்மையாக வாழ்பவன் வானுலக தேவர்களை விட சிறந்தவன் வாழ்வது எப்படி என்பதை அறிய வளமான திருக்குறளைப் படியுங்கள் பாடாத பொருள் இல்லை திருக்குறளில் சொல்லாத கருத்து இல்லை திருக்குறளில் 1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதைவிட 10 திருக்குறள் வழி நடப்பது நன்று ! திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி ! புலவர்களின் புலவர் கவிஞர்களின் கவிஞர் திருவள்ளுவர் ! உலகப்பொதுமறைப் படைத்த உலகப்பெரும் புலவர் திருவள்ளுவர் ! பெயரிலேயே திருவைப் பெற்ற திருவாளர் திருவள்ளுவர் ! அறநெறிப் போதிக்கும் அற்புத இலக்கியம் வடித்தவர் திருவள்ளுவர் ! அவ்வையின் உதவியால் அரங்கேற்றம் ஆனவர் திருவள்ளுவர் ! அழைத்ததும் ஓடிவரும் அன்பு மனைவியைப் பெற்றவர் திருவள்ளுவர் ! உலகில் அதிக மனிதர்கள் வாசித்த இலக்கியம் படைத்தவர் திருவள்ளுவர் ! ஈராயிரம் வயது கடந்தும் இளமையாக இருப்பவர் திருவள்ளுவர் ! மரபு அன்று என்றவர்களையும் ஏற்க வைத்தவர் திருவள்ளுவர் ! வாசுகியின் கணவர் வாசகர்களின் கண் அவர் திருவள்ளுவர் ! வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி ! கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் ! கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் ! மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும் வள்ளுவம் ! மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் ! வாழ்க்கைப் படகை செலுத்தத் துடுப்பாகும் வள்ளுவம் ! வாழ்வின் அர்த்தம் உணர்த்திடும் வள்ளுவம் ! ஒப்பற்ற உயர்ந்த இனிய இலக்கியம் வள்ளுவம் ! ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக இயம்பிய வள்ளுவம் ! மனஇருளை நீக்கி அறிவு ஒளி தரும் வள்ளுவம் ! மனக்கவலை போக்கும் மருந்தாகும் வள்ளுவம் ! மனிதனை சிறந்த மனிதனாக்கும் வள்ளுவம் ! மனிதநேயம் மனதிற்குப் பயிற்றுவிக்கும் வள்ளுவம் ! வாசித்தவருக்கு வாழ்வியல் நெறி புகட்டும் வள்ளுவம் ! வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும் வள்ளுவம் ! அகிம்சை தத்துவம் போதிக்கும் வள்ளுவம் ! அன்பின் வலிமை உணர்த்திடும் வள்ளுவம் ! நன்றியை மறக்காதீர் கற்பிக்கும் வள்ளுவம் ! நல்ல செயல்கள் செய்ய வைக்கும் வள்ளுவம் ! கல்வியின் சிறப்பை சித்தரிக்கும் வள்ளுவம் ! கற்றவரின் மேன்மையைக் காட்டிடும் வள்ளுவம் ! தாயே பசித்திருந்தாலும் தவறு செய்யாதே வள்ளுவம் ! தன்னிகரில்லா அறம் போதிக்கும் அற்புதம் வள்ளுவம் ! விலங்கு குணம் அறவே அகற்றிடும் வள்ளுவம் ! விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் வள்ளுவம் ! ஈடு இணையற்ற உலகப் பொதுமறை வள்ளுவம் ! எல்லோரும் போற்றிடும் பெட்டகம் வள்ளுவம் ! தமிழை அறியாதவரும் அறிந்தது வள்ளுவம் ! தமிழுக்கு மகுடமாக விளங்குவது வள்ளுவம் ! திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி ! பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை ! பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் ! மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் ! மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் ! வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் ! வசந்தம் அடையும் ரகசியம் கூறும் நூல் ! தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் ! தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !. தமிழென்ற சொல்லின்றி பெருமை சேர்த்த நூல் ! தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் ! நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க எனும் நூல் ! நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க எனும் நூல் ! ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் ! ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் ! பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் ! பயனுற வாழ்க்கை வாழ்ந்திட வழி சொல்லும் நூல் ! வானிலிருந்து வரும் மழை அமிர்தம் எனும் நூல் ! வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் ! இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் ! இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் ! கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும் எனும் நூல் ! கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக எனும் நூல் ! முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் ! முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் ! மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது ! மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது ! விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது ! பறவையில் தேசியப் பறவை மயில் உள்ளது ! தேசிய மரம் மலர் விலங்கு பறவை உள்ளன ! தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ? உலகப்பொது மறையை தேசிய நூலாக்க ! உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ? திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை ! தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை ! திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக ! திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக ! தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே ! கவிஞர் இரா .இரவி ! வடமொழி எழுத்துக்கள் என்றும் வேண்டாம் ! வளமான உலகின் முதல் மொழி தமிழுக்கு ! நடக்க முடியாதவருக்கு ஊன்றுகோல் தேவை ! ஓட முடிந்தவருக்கு ஊன்றுகோல் தேவையன்று ! .தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தமிழ் எழுத்து போதும் ! தன்னிகரில்லா மொழிக்கு பிறமொழி எழுத்து வேண்டாம் ! பொருளில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் ! தமிழில் கலப்படம் தமிழுக்குக் கேடு தரும் ! ரோஜா என்று எழுதவதை நிறுத்துங்கள் ! ரோசா என்று எழுதிப் பழகுங்கள் ! இராஜா என்று எழுதவதை நிறுத்துங்கள் ! இராசா என்று எழுதிப் பழகுங்கள் ! ரமேஷ் என்று எழுதவதை நிறுத்துங்கள் ! ரமேசு என்று எழுதிப் பழகுங்கள் ! எழுத்துக்குப் பற்றாக்குறை தமிழில் இல்லை ! ஏன் கையை ஏந்த வேண்டும் வடமொழியில் ! இல்லாதவன்தான் பிட்சை எடுத்து வாழ்வான் ! இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் ! வளமான எழுத்துக்களின் களஞ்சியம் தமிழ் ! வடமொழி எழுத்துக்களை கலப்பவரை இகழ் ! திட்டமிட்டு எழுத்துக் கலப்பை செய்கின்றனர் ! தடுத்திட திட்டம் வகுத்துத் தடுத்திடுவோம் ! அனைத்து மொழிகளின் தாய் நம் தமிழ்மொழி ! அனைவரும் தமிழ்மொழி காக்க அணி வகுப்போம் ! தமிழ் எங்கள் உயிருக்கு மேல் ! கவிஞர் இரா .இரவி ! தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று மற்றவர்களுக்கு உயிர்தான் மேல் மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல் தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன் தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும் தமிழைப் பழிப்பவர்களை நாங்கள் தாயே தடுத்தாலும் விடமாட்டோம் உலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி அனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி உலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி பாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி பாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி பாடல்களால் நிறைந்து விளங்கும் தமிழ்மொழி தேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி தேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை தமிழின் மகுடமான திருக்குறளுக்கு தேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம் தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி தமிழா நீ பேசுவது தமிழா ! தமிழா இப்படிப் பேசுவது தகுமா ? காலைப் பொழுதை மார்னிங் என்றாய் மதியப் பொழுதை ஆப்ட்ரநூன் என்றாய் மாலைப் பொழுதை ஈவ்னிங் என்றாய் நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய் பாட்டை சாங் என்றாய் வீட்டை ஹவுஸ் என்றாய் படுக்கை அறையை பெட்ரூம் என்றாய் கழிவறையை டாய்லெட் என்றாய் தமிழை டமில் என்றாய் தண்ணீரை வாட்டர் என்றாய் சோற்றை ரைஸ் என்றாய் உப்பை சால்ட் என்றாய் கடற்கரையை பீச் என்றாய் காதலியை லவ்வர் என்றாய் கண்களை அய்ஸ் என்றாய் கடிதத்தை லெட்டர் என்றாய் பள்ளியை ஸ்கூல் என்றாய் கல்லூரியை காலேஜ் என்றாய் மாணவனை ஸ்டுடென்ட் என்றாய் ஆசிரியரை டீச்சர் என்றாய் வானொலியை ரேடியோ என்றாய் விமானத்தை பிளைன் என்றாய் தொலைக்காட்சியை டிவி என்றாய் தொலைபேசியை போன் என்றாய் பணத்தை மணி என்றாய் குணத்தை கேரக்டர் என்றாய் வஞ்சியை கேர்ள் என்றாய் விபத்தை ஆக்ஸிடென்ட் என்றாய் இப்படிப் பேசியே தமிழைக் கொல்கிறாய் எப்போது வரும் உனக்கு தமிழ் உணர்வு ! தமிழா உன்னிடம் ஒரு கேள்வி சிந்தித்துப் பார் ஆங்கிலேயன் தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுவானா ? ஈழத் தமிழர்களின் உச்சரிப்பைப் பார் சோகத்திலும் சுந்தரத் தமிழ் பேசுகின்றனர் தமிழைச் சிதைப்பது தமிழனுக்கு அழகா ? தமிழா !சிந்தித்து தமிழிலேயே பேசு ! தமிழா ! பேசுவது தமிழா சொல் !கவிஞர் இரா .இரவி . தமிழா தமிழா சொல் தினமும் நீ தரணியில் பேசுவது தமிழா சொல் உலகின் முதல் மொழி தமிழ் உணர் உலக மொழிகளின் தாய் தமிழ் ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும் நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை அழகு தமிழில் அம்மா இருக்கையில் ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில் ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை தமிழோடு பிற மொழி கலந்துப் பேசுவது பிழை தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை தமிழன்தான் தமிழ் பேசும்போது தமிங்கிலம் பேசி உளறுகின்றான் இரு கரம் குவித்து வணக்கம் சொல் ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து பிறமொழி கலந்து பேசக் கூசு ! – கவிஞர் இரா .இரவி ! .இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் ! ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் ! திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் ! திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் ! எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ் ! எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் ! உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக ! உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக ! உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் ! உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ் ! இலக்கியங்களின் இமயம் நம் தமிழ் ! இலக்கணங்களின் இருப்பிடம் நம் தமிழ் ! எழுத்திலும் பேச்சிலும் நிலைத்த ஒரே செம்மொழி ! இனிமையான செம்மொழி சிதைப்பதை நிறுத்துக ! தமிழா தமிழை, தமிழாகப் பேசு ! தமிழா தமிழை, தமிழாக எழுது ! ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு ! ஒப்பற்ற தமிழுக்கு, பிறமொழி நஞ்சு ! என்ன வளம் இல்லை தமிழ் மொழியில் ! ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் ! ஆங்கிலச் சொற்கள் கலப்பது மடமை ! ஆங்கிலக் கலப்பின்றி பேசுவது கடமை ! தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு ! தமிழில் பிறமொழி கலவாமல் பேசு ! பிறமொழி எழுத்தும் , சொல்லும் ! தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்! சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி சாகாமல் காக்கும் மருந்து அமுதம் என்றார்கள் ! அமுதம் நாங்கள் பார்தது இல்லை ! அமுதம் நாங்கள் பருகியது இல்லை ! அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக அன்று புராணக்கதை கதைத்தது ! இன்பமாக வாழ வேண்டுமா ? இனிய தமிழ் படியு்ங்கள் ! துன்பம் தொலைய வேண்டுமா ? தீ்ந்தமிழ் படியு்ங்கள் ! சோகங்கள் ஒழிய வேண்டுமா? சந்தத்தமிழ் படியு்ங்கள் ! கவலைகள் போக வேண்டுமா? கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் ! விரக்தி நீங்க வேண்டுமா ? வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் ! ஒழுக்கமாக வாழ வேண்டுமா ? ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் ! பண்பாடாக வாழ வேண்டுமா ? பைந்தமிழ் படியு்ங்கள் ! நெறிகளை அறிந்திட வேண்டுமா ? நிதமும் தமிழ் படியு்ங்கள் ! வீரம் அறிந்திட வேண்டுமா ? விவேகத்தமிழ் படியு்ங்கள் ! சாதி மத வெறி அகற்ற வேண்டுமா? சீர்மிகு தமிழ் படியு்ங்கள் ! மனிதம் மலர்ந்திட வேண்டுமா ? மயக்கும் தமிழ் படியு்ங்கள் ! முத்திரை பதிக்க வேண்டுமா ? முதல்மொழி தமிழ் படியு்ங்கள் ! கற்பனைத்திறன் வேண்டுமா ? கனித்தமிழ் படியுங்கள் ! சுயமாகச் சிந்திக்க வேண்டுமா ? சுந்தரத்தமிழ் படியுங்கள் ! வாழ்வியலை உணர வேண்டுமா ? வற்றாதத் தமிழ் படியுங்கள் ! மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ? முத்தமிழ் படியு்ங்கள் ! மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ? மாண்புமிகு தமிழ் படியு்ங்கள் ! இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ? இனிமையான தமிழ் படியு்ங்கள் ! சாகாமல் வாழ வேண்டுமா ? சங்கத்தமிழ் படியு்ங்கள் ! சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! சாதாரணம் தமிழ் முன் அமுதம் ! தமிழை நினைக்காதவன் தமிழனா ? கவிஞர் இரா .இரவி ! தமிழை நாளும் சிதைக்கின்றனர் ஊடகத்தில் தமிழை நினைக்காதவன் தமிழனா ? சிந்திப்பாய் ! தமிழின் பெருமை தரணி அறிந்துள்ளது ! தமிழின் அருமை தமிழன் அறியவில்லை ! பேசும் சொற்களில் பெரும்பகுதி ஆங்கிலம் ! பேச்சில் நல்ல தமிழ் காணமல் போனது ! இந்நிலை இப்படியே தொடர்ந்தால் நம் ! இனிய தமிழின் நிலை என்னாகும் சிந்திப்பீர் ! உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் ! உயர்மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் ! நல்ல தமிழ் பேசினால் கேலி பேசாதீர்கள் ! நல்ல தமிழ் பேசி அனைவரும் முயலுங்கள் ! ஆடு மாடு உலக உயிரினங்கள் யாவும் ! அம்மா என்று அழகு தமிழில் ஒலிக்கின்றன ! தமிழன் மட்டும்தான் தாய்மொழி தமிழ் மறந்து ! தமிங்கிலம் பேசித் தமிழை சிதைக்கின்றான் ! மம்மி என்றால் செத்தப்பிணம் என்று பொருள் 1 மம்மி என்று அழைப்பது மடமை உணர்ந்திடு ! அப்பா என்று அழைப்பது தான் அன்பு ! டாடி என்பது தமிழ் அல்ல நீ நம்பு ! பெரியப்பா சித்தப்பா மாமா என்று ! பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு ! பெரிய ஆங்கிலத்தில் அங்கிள் என்ற ! பதத்தில் ஒற்றைச் சொல் மட்டுமே உண்டு ! பெரியம்மா சின்னம்மா அத்தை அண்ணி என்று ! பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு ! உலக மொழி என்று சொல்லும் ஆங்கிலத்தில் ஒற்றைச் சொல் ஆண்ட்டி மட்டுமே உண்டு ! அகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ் ! ஆங்கிலேயரும் புகழும் மொழி தமிழ் ! முப்பாலை உலகிற்கு தந்த மொழி தமிழ் ! முத்தமிழை உலகிற்கு தந்த மொழி தமிழ் ! தாயை மறந்தாலும் தமிழை மறக்காதீர் ! தாயினும் உயர்ந்தது தமிழ் உணர்வீர் ! என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி . உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் ! உலகம் முழுவதும் பரவியுள்ள மொழி தமிழ் ! உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் ! பன்னாட்டு ஆட்சிமொழியான மொழி தமிழ் ! பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் ! இணையத்தில் வாகை சூடிய மொழி தமிழ் ! இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் ! மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் ! மூத்த புலவர்கள் கட்டிக் காத்த மொழி தமிழ் ! எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் ! இணையில்லா திருக்குறளை ஈந்தமொழி தமிழ் ! மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ் மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் ! செம்மொழி நம் மொழி உணர்வாய் தமிழா ! செம்மையைக் காத்திட முயல்வாய் தமிழா ! கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் ! கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் ! கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் ! கலப்படம் மொழியில் புரிவதும் குற்றமே ! இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் ! எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் ! இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் ! இனிய முத்தமிழில் இனிய மொழி தமிழ் ! தமிங்கிலப் பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் ! தமிழை தமிழாகவேப் பேசிட முயலுங்கள் ! ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் அழகு தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து ! தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து ! இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் ! இருப்பவன் பிச்சை எடுத்தல் அநியாயம் ! என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி ! தமிழ்மொழி போல சிறந்த மொழி உலகிலில்லை ! தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை ! காப்பியமும் காவியமும் நிறைந்த மொழி தமிழ் ! கவிதைகளும் வசனங்களும் குவிந்த மொழி தமிழ் ! சொற்களின் சுரங்கம் நம் சுந்தரத் தமிழ் ! சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ் ! உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்தது ! உயிரினும் மேலானது நம் தாய்மொழி தமிழ் ! எழுத்துக்களுக்கு பற்றாக்குறை தமிழில் இல்லை ! எதற்காக பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டும் ! தமிழைத் தமிழாக மட்டுமே பேசுவோம் ! தமிழைத் தமிழாக மட்டுமே எழுதுவோம் ! மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் ! மொழியில் தூய்மை நாளும் கடைபிடிப்போம் ! தமிங்கிலம் பேசுவதை உடன் நிறுத்திடுவோம் ! தமிழோடு ஆங்கிலம் கலப்பதை ஒழித்திடுவோம் ! ஊடகத்தில் தமிழை சிதைத்து வருகின்றனர் ! ஒப்பற்ற தமிழை உருக்குலைத்து வருகின்றனர் ! ஆங்கிலேயர் ஆங்கிலத்தோடு தமிழ் கலப்பதில்லை ! தமிழர் மட்டும் தமிழோடு ஆங்கிலம் கல்ப்பதேன் ? .தமிழ்நாட்டில் தமிழ்க்கொலையா ? கவிஞர் இரா .இரவி ! சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் செந்தமிழில் வழக்காட இன்னும் முடியவில்லை ! மீனாட்சியம்மன் திருக்கோவில் கருவறையில் மதுரத்தமிழ் இன்றும் அனுமதிக்கவில்லை ! அங்காடிகளின் விளம்பரப் பலகைகளில் அழகு தமிழ் இன்னும் இடம் பெறவில்லை ! தமிழர்கள் பேசிடும் பேச்சு வழக்கில் தமிங்கிலம் மிக வேகமாக பரவிவிட்டது ! பத்துச் சொற்கள் தமிழன் பேசினால் பத்தில் எட்டுச் சொற்கள் ஆங்கிலமானது ! பத்திரிகைகளும் போட்டியிட்டு பரப்புகின்றன தமிங்கிலம் பைந்தமிழைத் தின்னும் திமிங்கிலமானது தமிங்கிலம் ! பண்பலை வானொலிகளும் பரப்புகின்றன தமிங்கிலம் படிக்காத பாமரப் பாட்டி பேச்சிலும் கலந்தது தமிங்கிலம் ! தொலைக்காட்சிகளும் தொல்லை தொடர்கின்றது தவறாமல் தினமும் நடக்குது தமிழ்க்கொலை ! நிகழ்ச்சிகளின் பெயர்களில் ஆங்கிலம் நிகழ்ச்சியில் பேசுவோரின் பேச்சில் தமிங்கிலம் ! இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இனி என்னாகும் நம் தமிழ் தயவுசெய்து சிந்திப்பீர் ! உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக ! உரிய மதிப்பினை நம் தமிழுக்குத் தந்திடுக ! உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி ! தமிழ்மொழி போல சிறந்த மொழி உலகிலில்லை ! தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை ! காப்பியமும் காவியமும் நிறைந்த மொழி தமிழ் ! கவிதைகளும் வசனங்களும் குவிந்த மொழி தமிழ் ! சொற்களின் சுரங்கம் நம் சுந்தரத் தமிழ் ! சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ் ! உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்தது ! உயிரினும் மேலானது நம் தாய்மொழி தமிழ் ! எழுத்துக்களுக்கு பற்றாக்குறை தமிழில் இல்லை ! எதற்காக பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டும் ! தமிழைத் தமிழாக மட்டுமே பேசுவோம் ! தமிழைத் தமிழாக மட்டுமே எழுதுவோம் ! மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் ! மொழியில் தூய்மை நாளும் கடைபிடிப்போம் ! தமிங்கிலம் பேசுவதை உடன் நிறுத்திடுவோம் ! தமிழோடு ஆங்கிலம் கலப்பதை ஒழித்திடுவோம் ! ஊடகத்தில் தமிழை சிதைத்து வருகின்றனர் ! ஒப்பற்ற தமிழை உருக்குலைத்து வருகின்றனர் ! ஆங்கிலேயர் ஆங்கிலத்தோடு தமிழ் கலப்பதில்லை ! பிறமொழி எழுத்தும் , சொல்லும் ! தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும் ! கவிஞர் இரா .இரவி ! இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் ! ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் ! திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் ! திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் ! எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ் ! எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் ! உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக ! உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக ! உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் ! உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ் ! இலக்கியங்களின் இமயம் நம் தமிழ் ! இலக்கணங்களின் இருப்பிடம் நம் தமிழ் ! எழுத்திலும் பேச்சிலும் நிலைத்த ஒரே செம்மொழி ! இனிமையான செம்மொழி சிதைப்பதை நிறுத்துக ! தமிழா தமிழை தமிழாகப் பேசு ! தமிழா தமிழை தமிழாக எழுது ! ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு ! ஒப்பற்ற தமிழுக்கு பிறமொழி நஞ்சு ! என்ன வளம் இல்லை தமிழ் மொழியில் ! ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் ! ஆங்கிலச் சொற்கள் கலப்பது மடமை ! ஆங்கிலக் கலப்பின்றி பேசுவது கடமை ! தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு ! தமிழில் பிறமொழி கலவாமல் பேசு .

கருத்துகள்