29.10.2023 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ", சிறந்த கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கல், முனைவர் வரதராசன் கவிதை நூல் வெளியீடு.

29.10.2023 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ", சிறந்த கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கல், முனைவர் வரதராசன் கவிதை நூல் வெளியீடு.  நாள் 29.10.2023. மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்  "என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி .கோ.குறளடியான், ச .லிங்கம்மாள்,  மு .இதயத்துல்லா,( இளையாங்குடி ) , பெரி .கரு .சம .சமயக்கண்ணு, அஞ்சூரியா க .செயராமன் ஆகியோர் கவி பாடினார்கள் . மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும்  மறையாத கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன்  ஆதி சிவம் தென்னவன்  வாழ்த்துரையாற்றி, விருது வழங்கினார் ..பொறுப்பாளர்கள் தவிர மற்ற கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று  கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கினார்கள் . கவிஞர்கள் பெரி .கரு .சம .சமயக்கண்ணு, கி .கோ.குறளடியான்,அஞ்சூரியா க .செயராமன் ஆகிய மூவரும் "புரட்சித் தமிழ் முரசு" விருது பெற்றனர் .முனைவர் வரதராசன் எழுதிய "கவிஞன் பார்வையில் நடப்பும் நவீனமும் "" கவிதை நூல் வெளியிடப்பட்டது.  
படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

கருத்துகள்