மதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் - நாள் 27.8.2023..படங்கள்: நன்றி புகைப்படக் கலைஞர்,ரெ.கார்த்திகேயன்

நாள் 27 .8.2023. மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம்,துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துனைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் தாய்மொழிக் கெல்லாம் தாயமொழி தமிழே "என்ற தலைப்பில், மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது . பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி .கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், அஞ்சூரியா க .செயராமன், மு .இதயத்துல்லா, புலவர் .முருகுபாரதி, பெரி .கரு .சம .சமயக்கண்ணு ,சாந்தி திருநாவுக்கரசு, இராம.பாண்டியன், நா .குருசாமி, எம் .வேல்பாண்டியன் ஆகியோர் கவிதை படித்தனர். . துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன் எழுதிய மணக்கும் கவிதை பூக்கள் நூல் வெளியிடப்பட்டது . புதுவை கவியரங்கில் " கலைஞர்" பற்றிய கவிதை பாடி நூலும், பாராட்டு சான்றிதழும் பெற்ற மாமதுரை கவிஞர் பேரவையைச் சேர்ந்த கவிஞர்பேராசிரியர் சக்திவேல் ,கவிதாயினி ச .லிங்கம்மாள், கவிஞர்மு .இதயத்துல்லா, கவிஞர்அஞ்சூரியா க .செயராமன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர் .ஊடகத்துறையில் தமிழ் விருது பெற்ற கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசும் பாராட்டுப் பெற்றார் .படங்கள்: நன்றி புகைப்படக் கலைஞர்,ரெ.கார்த்திகேயன் .

கருத்துகள்