வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் ! வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில் வசித்தால் ! வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம்தான் ! சொந்த வீட்டை விற்று விட்டு ! வாடகை வீடு வந்தால் வலி அதிகம் ! நம் குழந்தை அவர் குழந்தை சண்டையிட்டால் ! நம் குழந்தை அடங்கிப் போக வேண்டும் ! நாய் வளர்க்க நம் மகள் ஆசைப்பட்டால் ! நாயை விட அதிகம் குரைப்பார் வீட்டுக்காரர் ! வருடா வருடம் வாடகை ஏற்றுவார் ! வாய் பேசாமல் தந்தாக வேண்டும் ! வாடகை வீட்டில் குறை இருந்தால் ! வீட்டுக்காரரிடம் பயந்து சொன்னால் ! இஷ்டம் என்றால் இரு !கஷ்டம் என்றால் போ! இஞ்சி தின்ன குரங்குப் போல கத்துவார் ! பிடிக்காத புதிதாக வந்த வீடு ! பிடிக்கத் துவங்கி மனம் ஒப்பும் ! வீட்டைக் காலி செய்யச சொல்லி ! வீட்டுக்காரர் உத்தரவு போடுவார் ! மறுபடியும் வீடு பார்க்கும் படலம் ! மொத்தமாக முன்தொகை கேட்பார்கள் ! சொந்த வீடு கட்டும் ஆசையில் ! சொந்தமாக மனை வாங்கி ஏமாந்தோம் ! வாடகை வீடு மாறி மாறி குடும்பத்திற்கு ! வலிக்கிறது நெஞ்சம் துக்கமே மிச்சம் ! படிவங்கள் பூர்த்தி செய்யும் போது ! பார்த்தால் நிரந்தர முகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும் ! இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு ! என்று சொல்லி வைத்தனர் வீடு மாறியே நொந்தோம் ! குறைந்த பட்சம் ஆதார் அட்டை கூட ! கொடுப்பதில்லை வீடு மாறியவர்களுக்கு ! ஒருவனுக்கு பத்து வீடுகள் உண்டு ! பலருக்கு ஒரு வீடு கூட இல்லை ! எட்டு அடுக்கு மாளிகையில் ஒரே ஒரு குடும்பம் ! எட்டிப் பார்க்கும் குழாயில் பல குடும்பம் ! அனைத்து வீடுகளையும் அரசுடமையாக்கி ! ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு மட்டும் தாருங்கள் !

கருத்துகள்