பிள்ளையார் சிலையை ஏன் உடைத்தேன்!*
-++++++++(++++++++++++++++++++++++++
*நீதிமன்றத்தில் கர்ஜித்த பெரியார்*
------------------------------
பெரியார் பிள்ளையாரை போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்…
*நீதிபதி* (கைது செய்த காவலரிடம்): இவர் என்ன குற்றம் செய்தார்?
*காவலர்:* இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்.
*நீதிபதி* *(பெரியாரிடம்):* பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?
*பெரியார்:* ஆமாம், போட்டுடைத்தேன்.
*நீதிபதி:* ஏன் அப்படிச் செய்தீர்கள்?
*பெரியார்:* கடைவீதிக்குப் போனேன். அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன். யாருக்கும் இடையூறு இல்லாமல், தெரு ஓரமாகப் போட்டுடைத்தேன்.
*நீதிபதி:* ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதைப் புண்படுத்தாதா? அது தவறல்லவா?
*பெரியார்:* நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, *பலர் அதேபோல வாங்கினார்கள்.* அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்.
*நீதிபதி* (காவலரிடம்): மற்றவர்கள் என்ன செய்தார்கள்?
*காவலர்: அவர்களும் போட்டுடைத்தார்கள்.*
*நீதிபதி:* அவர்களை ஏன் கைது செய்யவில்லை?
*காவலர்:* அவர்கள் *“கடவுள் உண்டு”* என்று சொல்லி *உடைத்தார்கள்*. ஆனால் இவரோ, *“கடவுள் இல்லவே இல்லை”* என்று சொல்லி உடைத்தார்.
*நீதிபதி:* இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? *“கடவுள் இல்லை”* என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு. *“கடவுள் உண்டு”* என்று சொல்பவர், அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? *(பெரியாரை பார்த்து)* அய்யா, நீங்கள் போகலாம்.
*பெரியார் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தார்!*
படித்த செய்தியில் பிடித்த செய்தி
கருத்துகள்
கருத்துரையிடுக