மகாகவி பாரதியார் நினைவு நாள் 12.9.2022.

மகாகவி பாரதியார் நினைவு நாள் 12.9.2022. மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி ! எட்டையபுரத்தில் பிறந்து எட்டாத உயரம் எட்டியவன் பாரதி ! சிட்டுக்குருவிகளின் நேசன் சின்னச்சாமியின் செல்ல மகன் பாரதி ! முறுக்கு மீசைக்காரன் முத்தமிழுக்குச் சொந்தக்காரன் பாரதி ! செந்தமிழ் அன்னையின் புதல்வன் செல்லம்மாளின் அன்புக் கணவன் பாரதி ! பரங்கியர் பாரதம் விட்டு அகலக் காரணமானவன் பாரதி ! பாரதம் சிறக்க பா பல பாடி பா ரதம் செலுத்தியவன் பாரதி ! அச்சம் அறியாதவன் உச்சம் அடைந்தவன் பாரதி ! பன்மொழி அறிஞன் பண் இசைப் பாடல் யாத்தவன் பாரதி ! மற்ற மொழிகள் அறிந்திருந்தும் மட்டற்ற தமிழை நேசித்தவன் பாரதி ! கவிதை நாயகி கண்ணம்மாவை கண் முன்னே கொண்டு வந்தவன் பாரதி ! பள்ளியாசிரியராக இருந்தவன் பள்ளியின் பாடநூலில் இடம் பெற்றவன் பாரதி ! இயற்கையை ரசித்தவன் இன்பக்கவி தந்தவன் பாரதி ! பாப்பா பாடல் பாடியவன் பாப்பாக்கள் உள்ளம் நிறைந்தவன் பாரதி ! காலத்தால் அழியாத கவிதைகள் கல்வெட்டாக பதித்தவன் பாரதி ! பெண்ணுரிமை பாடியவன் பேதமையைச் சாடியவன் பாரதி ! மூடநம்பிக்கைகளை வெறுத்தவன் பகுத்தறிவைப் பயன்படுத்தியவன் பாரதி ! உடலால் மறைந்திட்ட போதும் பாடலால் என்றும் வாழ்பவன் பாரதி ! . மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி எழுதியபடி வாழ்ந்தவன் வாழ்ந்தபடி எழுதியவன் மகாகவி பாரதி ! புதுமைக்கும் மரபுக்கும் பாலம் அமைத்தவன் மகாகவி பாரதி ! விடுதலை விதையை விருட்சமாக வளர்த்தவன் மகாகவி பாரதி ! மற்றவரை மதித்தவன் சுயமரியாதை மிக்கவன் மகாகவி பாரதி ! வறுமையிலும் செம்மை ஏழ்மையிலும் நேர்மை மகாகவி பாரதி ! பா ரதம் செலுத்திய பாக்களின் சாரதி மகாகவி பாரதி ! பெண் விடுதலைக்கு போர்முரசு கொட்டியவன் மகாகவி பாரதி ! வாழ்வில் ஆசைப்பட்டவன் பேராசைப்படாதவன் மகாகவி பாரதி ! மூடப் பழக்கங்களுக்கு மூடு விழா நடத்தியவன் மகாகவி பாரதி ! பகுத்தறிவைப் பயன்படுத்தி பாடல்கள் புனைந்தவன் மகாகவி பாரதி ! அழியாத பாடல்கள் அகிலத்திற்கு வழங்கியவன் மகாகவி பாரதி ! வெள்ளையர்களை விரட்டிய காரணிகளில் ஒன்றானவன் மகாகவி பாரதி ! வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது பாடல்களின் காலம் பல நூற்றாண்டு மகாகவி பாரதி ! மொழிகள் பல பயின்றவன் தமிழே சிறப்பு அறிவித்தவன் மகாகவி பாரதி ! . மகாகவி பாரதி கண்ட விடுதலை ! கவிஞர் இரா .இரவி ! அடையும் முன்பே அடைந்து விட்டோம் என்று ! அன்றே ஆனந்த கூத்தாடியவன் பாரதி ! இன்று இங்கு இருந்திருந்தால் பாரதி ! ஏன் ? பெற்றோம் என்று நொந்து இருப்பான் ! வெள்ளையனே வெளியேறு என்றான் அவன் ! வெள்ளையனே கொளையடிக்க வருக ! என்றானது ! பன்னாட்டு நிறுவனங்கள் வேண்டாம் என்றான் அன்று ! பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளைகள் இன்று ! குடிக்கும் தண்ணீர் பொதுவாக இருந்தது அன்று ! குடிக்கும் தண்ணீர் விலைக்கு விற்கின்றனர் இன்று ! மலைகளை ரசித்துப் பாடல் பாடினான் அன்று ! மலைகளை வெட்டி பல நாடுகள் கடத்தினர் இன்று ! சிட்டுக் குருவிகளுக்கு அரிசியிட்டு மகிழ்ந்தான் அன்று ! சிட்டுக் குருவிகளைக் கூண்டோடு ஒழித்தனர் இன்று ! ஆறுகளையும் மணல்களையும் பாடினான் அன்று ! ஆறுகளையும் மணல்களையும் காணவில்லை இன்று ! பெண் விடுதலை வேண்டும் உரக்கப் பாடினாய் அன்று ! பெண் உயிர் எடுத்து விடுதலை தருகின்றனர் இன்று ! அடிமை விலங்கை அடித்து நொறுக்கினான் அன்று ! அடிமை விலங்கை வாங்கிப் பூட்டினர் இன்று ! காக்கை குருவி எங்கள் சாதி என்றான் அன்று ! காக்கை போல தமிழரைச் சுடுகிறான் இன்று ! சேதுவை மேடாக்கி பாலம் கட்டப் பாடினான் அன்று ! சேது கடல் திட்டத்தையே கை கழுவினர் இன்று ! தமிழ்மொழி இனிய மொழி என்றான் அன்று ! தமிழ்க்கொலை நடக்கிறது ஊடகத்தில் இன்று ! உயிருக்கு மேலாக தமிழை நேசித்தான் அன்று ! உயிர்கள் போனது ஈழத்தில் தமிழால் இன்று ! இந்தியாவை இந்தியர் ஆள விரும்பினான் அன்று ! இந்தியாவை வல்லரசுகள் ஆள்கின்றனர் இன்று ! இந்தியாவே முடிவுகள் எடுக்க விரும்பினான் அன்று ! இந்திய அமைச்சரை அமெரிக்கா முடிவு செய்கிறது இன்று ! காணி நிலம் வேண்டும் என்று பாடினான் அன்று ! காணி நிலம் எங்கும் கெயில் குழாய் பதிக்கின்றனர் இன்று ! . உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை என்றான் அன்று ! உழவும் தொழிலும் சிதைந்து வழக்கொழிந்தது இன்று ! பஞ்சம் பட்டினி ஒழிய வேண்டும் என்றான் அன்று ! பஞ்சம் பட்டினி தலை விரித்து ஆடுகின்றது இன்று ! அச்சமில்லை அச்சமில்லை என்று பாடினான் அன்று ! அச்சமின்றி யாருமில்லை என்றானது இன்று ! புதிய ஆத்திச்சூடி பாடி புத்துணர்வு தந்தான் அன்று ! புதிய தலைமுறை ஆத்திச்சூடி அறியவில்லை இன்று ! திருவள்ளுவரை உலகிற்கு தந்த தமிழ்நாடு என்றான் அன்று ! திருக்குறளை தேசிய நூலாக்க மறுக்கின்றனர் இன்று ! கவிதை எழுதியபடி கவிதையாகவே வாழ்ந்தான் அன்று ! கவிதை எழுதுவோர் எழுதியபடி வாழவில்லை இன்று ! அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினாய் அன்று ! அன்பு என்றால் என்னவென்றுதெரியவில்லை இன்று ! மகாகவி பாரதி கண்ட விடுதலை இது இல்லை ! மகாகவி பாரதி இருந்தால் நொந்து இருப்பான் உண்மை !

கருத்துகள்