முது முனைவர்.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் கீழ்க்கண்ட நூல்களிலிருந்து அரிய தகவல்களும்,பொன்மொழிகளும்;-

முது முனைவர்.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் கீழ்க்கண்ட நூல்களிலிருந்து அரிய தகவல்களும்,பொன்மொழிகளும்;- (1) தகவல்கள் எவ்வளவு வலிமையானவையாக இருந்தாலும் அவற்றை எந்த ஊடகங்களில் நாம் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். (2) அன்பு என்கிற ஊடகம் சக்தி வாய்ந்தது,அதன் மூலமே அடுத்தவர்களை எளிதில் கவர முடியும். ----- ' இலக்கியத்தில் மேலாண்மை ' நூலில்.👆 --------- ------- ------- ------ -------- -------- (1) மகத்தான மனிதர்களுக்கு அருகில் இருப்பவர்களும் எளிமையாகவே இருப்பார்கள். (2) அதிர்ச்சிகளை எதிர்கொள்ளாமல் பாதுகாப்பாக வளர்வதில் எந்தப் பயனும் இல்லை. ----- ' நாமார்க்கும் குடியல்லோம் ' நூலில்👆 ------ ------ ------- ------- ------ ------ ------- (1) திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் துறவு என்றால், அதைச் செய்துதான் தீரவேண்டும். (2) பிரபஞ்சமே தாயாக மாறும் அனுபவம்தானே துறவு. (3) " வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு . . . அவ்வளவுதான். " ----- " சாகாவரம் " நூலில்.☝️ ----- ---- ------ ------ ------ ----- ----- -------- (1) நேரத்திற்கு இருக்கும் மகத்துவமே அதைத் திரும்பப் பெற முடியாது என்கிற செய்திதான். (2) நம் பயத்திற்குக் காரணமே நேர விரயம் தான். -------- 👆 " அச்சம் தவிர் " நூலில். ---------------------------------

கருத்துகள்