முதுமுனைவர்.இறையன்பு அவர்கள், " மனிதர்களை வாசிக்கிறேன் " எனும் நூலில். ....முதற்பதிப்பு:ஜூன் 2020. ....வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்,044-24314347. ...விலை; ரூ.20.00.
முதுமுனைவர்.இறையன்பு அவர்கள், " மனிதர்களை வாசிக்கிறேன் " எனும் நூலில்.
....முதற்பதிப்பு:ஜூன் 2020.
....வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்,044-24314347.
...விலை; ரூ.20.00.
(1) வாசிக்கும் நூல்கள் பலதரப்பட்டவையாக இருக்கும்போதுதான் வாசிப்பவன் மேன்மையடைகிறான்.
(2)ஒருவன் அறிவியலையும் வாசிக்க வேண்டும்:அது உலகை அறிந்துகொள்ள. இலக்கியத்தையும் வாசிக்க வேண்டும்;உள்ளத்தை உணர்ந்துகொள்ள.
(3). சரித்திரத்தையும் வாசிக்க வேண்டும்;தவறுகளைத் திருத்திக்கொள்ள.வாழ்க்கை வரலாற்றையும் வாசிக்க வேண்டும்; நமக்கு வரும் தடைகள் சாதாரணமானவை என்று உணர்ந்துகொள்ள.
(4) வாசிப்பதை நாம் சந்திக்கின்ற மனிதர்களோடு பொருத்திப் பார்க்காத வரை அவை ஏட்டுச் சுரைக்காயின் பொய் விதைகளாகவே இருந்து விடும்.
(5) அறிவியல் புற வாழ்வை மேம்படுத்துகிறது. இலக்கியம் அக வாழ்வை மேன்மையாக்குகிறது.
....
கருத்துகள்
கருத்துரையிடுக