-டாக்டர்.வெ.இறையன்பு -ஓடும் நதியின் ஓசை(இரண்டாம் பாகம்)நூலிலிருந்து,எது ஆன்மிகம்?எனும் தலைப்பில்

 



மதங்களை அடியார்கள் தோற்றுவிக்கவில்லை. நாம் தான் அவற்றைத் தோற்றுவித்தோம். நம் முகத்திலிருக்கும் கோணலுக்காக நாம் கண்ணாடிகளைப்போட்டு உடைக்கிறோம். 
ஆன்மிகம் என்பது சாரத்தை உறிஞ்சிக்கொண்டு சக்கையை எறிந்துவிடுகின்ற சமாச்சாரம். எதையும் எப்போதும் வருத்தமின்றித் துறக்கத் தயாராகும் மனப்பக்குவமே ஆன்மிகம்.
*  மதவாதிகள்"எல்லாம் மாயை" என்று சொல்லி அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்; ஆன்மிகவாதிகள் எல்லாம் நிஜம் என்று பயந்து அவற்றை உதிர்க்கத் தயாராகிறார்கள். 
*கரையை அடைந்ததும் தோணியைத் தோள்களில் தூக்கி அலைய வேண்டியதில்லை.மதம் என்கிற மொட்டு ஆன்மிகமாக மலர அன்புதான் தென்றலாக முடியும். 
-டாக்டர்.வெ.இறையன்பு
-ஓடும் நதியின் ஓசை(இரண்டாம் பாகம்)நூலிலிருந்து,எது ஆன்மிகம்?எனும் தலைப்பில்


கருத்துகள்