கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் இன்று 17.10.2020. கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !

 



கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் இன்று 17.10.2020.

கவியரசு கண்ணதாசன் !  கவிஞர் இரா .இரவி !

சங்க இலக்கியத்தை

சாமானியருக்குச் சமர்பித்தவர்

கவியரசு !

திருக்குறளின் நுட்பத்தை

திரைப்பாடலில் வடித்தவர்

கவியரசு !

நிரந்தரமானவன் அழிவில்லை

நிதர்சனமான உண்மை

கவியரசு!

பணத்தை மதிக்காதவர்

குணத்தை மதித்தவர்

கவியரசு!

தித்திக்கும் பாடல்களை

திகட்டாமல் தந்தவர்

கவியரசு !

நடிகர் திலகம் மக்கள் திலகம்

சிகரமடையக்  காரணமானவர்

கவியரசு !

காலத்தால் அழியாத

கல்வெட்டுக்கவி புனைந்தவர்

கவியரசு !

கொடிக்கட்டிப் பறந்த போதும்

செருக்கு இல்லாத எளியவர்

கவியரசு !

ரகசியம் இல்லாத

அதியசக் கவிஞர்

கவியரசு !

முற்றிலும் பொருத்தமானவர்

பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்

கவியரசு !

கள்ளம் கபடமற்றவர்

குழந்தை மனம் படைத்தவர்

கவியரசு !

கண்ணே கலைமானே

கடைசியாகப் பாடியவர்

கவியரசு !

கவியரசு என்றால் கண்ணதாசன் !   கவிஞர் இரா .இரவி .

கவியரசு என்றால் கண்ணதாசன் !   

கண்ணதாசன் என்றால் கவியரசு !

"ஆறு மனமே ஆறு " பாடலின் மூலம் 

ஆறுதல் வழங்கிய கவியரசு நீ !

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் " பாடலில் 

தோற்றவருக்குத் தெம்பு  தந்தவன் நீ !

"நான் மலரோடு தனியாக" பாடலில் 

நல்ல காதலை சுகமாக வடித்தவன் நீ !

"மலர்களைப்  போல் தங்கை" பாடலுக்கு 

மயங்காத உள்ளம் இல்லை உலகில் !

"போனால் போகட்டும் போடா "பாட்டில் 

புத்திப்புகட்டும் நிலையாமையைப் பாடினாய் !

"நான் சார்ந்த மதம் தாமதம் "என்று சொல்லி 

நீ தாமதத்தையும் நகைச்சுவையாக்கியவன்  !

சித்தர்கள்  பாடல்களை எளிமைப் படுத்தி   

சித்திரமாய் திரையில் தீட்டித் தந்தவன் நீ !

வாழ்வியல் கருத்துக்களை பாடல்களில் 

வற்றாத ஜீவ நதியாக  வார்த்தவன்  நீ !

காதலின் வேதனையை பாட்டில் 

கடவுளோடு ஒப்பிட்டுப் பாடியவன் நீ !

ஆங்கில  இலக்கியம் படிக்காத   நீ 

ஆங்கில  இலக்கியம் வென்றாய் பாட்டில் !

சங்க   இலக்கியத்தை  திரைப்பாடலில் வைத்தாய் 

சாமானியருக்கும் புரிந்திட பாடல் படைத்தாய் !

கம்ப இராமாயண கருத்துக்களையும் 

கனிச்சாறாக பாட்டில் பிழிந்தவன் நீ !

"படைப்பதனால் என் பெயர் இறைவன்" என்று 

படைத்தாய் இறவாத பாடல்களை நீ !

எந்த நிலையிலும் மரணமில்லை என்று பாடி 

இன்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறாய் நீ !

உனக்குப் பின் பாட்டெழுத யார் யாரோ வந்தனர் 

உன் இடத்தை யாருமே எட்ட வில்லை ! 

கவியரசு என்றால் கண்ணதாசன் !   

கண்ணதாசன் என்றால் கவியரசு !

-----------------------------------------------------

பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் !

கவிஞர் இரா .இரவி !

காதல், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் பாடியவர்

கற்கண்டுப் பாடல்களை வெண்திரையில் தந்தவர் !

கடவுள் காதலித்து சாக வேண்டும் என்பதை

நண்பர் சௌந்தர்ராசனுக்காக வாட வேண்டுமென மாற்றியவர் !

அண்ணனிடம் கடன் கேட்டு மறுத்த நேரத்தில்

அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பாடல் வடித்தவர் !

சிறுகூடல்பட்டி என்ற ஊருக்குப் பெருமையை

பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர் !

முத்தையா படைத்த பாடல்கள் தமிழ்ச் சொத்தானது

சொத்தையான பாடலை என்றும் எழுதாதவர் !

எம்மதமும் சம்மதமென எல்லா மதத்திற்கும் எழுதியவர்

எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்று சொல்லியவர் !

பதறி விரைவாக மகிழுந்து ஓட்டிய ஓட்டுனரிடம்

பத்துநிமிடம் தாமதமாகப் போனால் பரவாயில்லை !

பூமியை விட்டு மிக விரைவாக என்னை

பத்து வருடங்கள் முந்தி போக வைத்திடாதே என்றவர் !

மாணவர் கவிதையை தான் வாசித்து அரங்கில்

மாணவருக்குப் பாராட்டை வாங்கித் தந்தவர் !

பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு

பல்வேறு பொருள்களில் பொருள்படப் பாடியவர் !

கவியரங்குகளில் கைதட்டல் கவிதைகள் வாசித்தவர்

கவிதைக்கு பெரும் மதிப்பை பெற்றுத் தந்தவர் !

ஏமாற்றத் தெரியாததால் அரசியலில் வெல்லவில்லை

எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் உள்ளம் பெற்றவர் !

கல்வி வள்ளல் காமராசர் மதித்த கவிஞர்

கக்கன் வாழ் வேண்டுமென வாழ்த்திய கவிஞர் !

மக்கள் திலகமும், நடிகர் திலகமும் புகழ்பெறக் காரணமானவர்

மக்கள் மனதில் விட்டு நீங்காத பாடல்கள் வடித்தவர் !

காலார நடந்து சென்னை வீதியில் சிலை அருகே உறங்கிட

காவலருக்கு கையூட்டுத் தர பணமின்றி அலைந்தவர் !

பாட்டெழுதி அதே வீதியில் அய்ந்து சொந்த கார்கள்

பயணிக்க சொந்தப்படம் எடுத்து மகிழ்ந்தவர் !

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஊதியமென சம்பாதித்து

இந்தியாவைப் போல கடனும் பெற்றவன் என்றவர் !

ஒளிவுமறைவின்றி தன் வரலாறு வடித்தவர்

ஒப்பற்ற காந்தியடிகள் போல உண்மைகள் எழுதியவர் !

மகனுக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியவர்

மகன் மகள் கவிதை மட்டுமல்ல வரிகளையும் அடிக்காதவர் !

அதிகம் படிக்காவிட்டாலும் அதிகம் பாடியவர்

அதிகம் படித்தவர்களும் பார்த்து வியந்தவர் !

கொள்கைப் பாடல்கள் திரைப்படத்தில் எழுதியவர்

கொலைவெறிப் பாடல்களின் காலம் இது !

தமிழ் இக்கியங்களை பாடல்களில் வடித்தவர்

தமிழ்க்கொலை பாடல்களின் காலம் இது !

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

நிந்தன் அருமை இன்று உணர்கிறோம். !

கவியரசு என்றால் கண்ணதாசன், கண்ணதாசன் என்றால் கவியரசு

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் !

----------------------------------------------------------------------------------------------

.கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து

எட்டாத உயரம் உயரந்தவன் நீ !

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும்

குவலயத்தில் பொருத்தமானவன் நீ !

நான் நிரந்தரமானவன் என்று அறிவித்து

நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைத்தவன் நீ !

உன் பாடல் ஒலிக்காத வானொலி இல்லை உலகில்

உன் பாடல் ஒலிக்காத வானொலி வானொலியே இல்லை !

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினரும்

அன்போடு ரசிக்கும் பாடல் உன் பாடல் !

எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்றுரைத்து

சினம் கொண்ட அவையைச் சிரிக்க வைத்தவன் நீ !

படைத்தவன் யார் ?என்பது முக்கியம் அல்ல

படைப்பைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியவன் நீ !

உனக்கு இணையான ஒரு கவிஞன்

உனக்கு அடுத்து யாருமில்லை என்பதே உண்மை !

உனக்கு நிகர் நீ மட்டுமே தான்

உன்னை விஞ்சிட எவருமில்லை உலகில் !

தொகைக் குறிப்பிடாதக் காசோலைத் தந்தபோதும்

தொகைக் குறிப்பிட ஆசைப் படாதவன் நீ !

பணத்திற்காக ஏங்கும இந்த உலகில்

பணத்திற்காக ஏங்காத நல்லவன் நீ !

செருக்கோடு இருந்த திரை உலகில் பலரின்

செருக்கை அகற்றிய கவிஞன் நீ !

கண்ணதாசனே உன் இயற்ப பெயர் முத்தையா

கற்கண்டென நீ வடித்த பாடல்கள் தமிழின் சொத்து ஐயா !

எங்கு நீ கற்றாய் இத்தனை வித்தை

இனிய பாடல்கள் பதிந்து மனதில் விதையாக !

காலத்தால் அழியாத கல்வெட்டு வரிகளை

காற்றினில் விதைத்த சகல கல வல்லவன் நீ !

நீ குடித்து விட்டு எழுதியதாக அறியாதவர்கள் உளறினர்

நீ குடித்து விட்டு எழுதவில்லைஅறிந்தோர் சொன்னார்கள் !

மகாத்மா காந்தியடிகளின் சத்திய சோதனைப் போல

மன வாசம் வீசும் ரகசியம் இல்லா வனவாசம் படைத்தாய் !

அத்திப் பூத்தது போல அதிசயமாகப் பூத்த கவிஞன்

அன்பில் குழந்தைப் போல உள்ளம் கொண்டவன் நீ !

வானில் இருந்து வந்த தேவ தூதன் நன் என்று சொல்லாதவன்

மண்ணில் இருந்து பிறந்து மண்மக்களுக்காக் பாடியவன் நீ !

மதுக் குடிக்க உரிமம் கேட்டு நீ விண்ணப்பித்த போது

மறுத்தார் கக்கன்ஜி தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக !

மது மட்டும் நீ குடிக்காமல் வாழ்ந்து இருந்தால்

மதுர கவி இன்னும் பல்லாயிரம் பாடி இருப்பாய் !

இயேசு காவியம் எழுதிய காலங்களில் நீ

மிகத் தூய்மையாக இருந்ததாகப் பேராயர் கூறினார் !

முன் பாதியில் உனக்கு இணையான நாத்திகன் இல்லை

பின் பாதியில் உனக்கு இணையான ஆத்திகன் இல்லை !

சிறு கூடல் பட்டி என்ற சிற்றூரில் பிறந்த நீ

சிகாகோ வரை புகழ் பலப் பெற்றாய் !

உன் பாடல் இல்லை என்று பொய் உரைத்தப் போதும்

உன் பாடல் தான் என்று அறுதியிட்டார் மக்கள் திலகம் !

உடலால் உலகை விட்டு மறைந்த போதும்

பாடலால் மக்கள் மனங்களில் வாழ்பவன் நீ !

உலகம் உள்ளவரை தமிழ் மொழி நிலைக்கும்

தமிழ் மொழி உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்

--------------------------------------------------------------

கவியரசர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !  

சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்து

பெரும் கூடல் பாட்டு எழுதிய கவியரசர் !

முத்தையா அவர் எழுதிய பாடல்கள் எதுவும்

சொத்தையில்லை தமிழ் சொத்தானது !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து

எட்டாத கருத்துக்களை எட்டிட வைத்தவர் !

இராமனின் தந்தை தசரதனுக்கு மூன்று மனைவி !

கவிதையின் தந்தை கண்ணதாசனுக்கு மூன்று மனைவி !

பொன்னம்மா பார்வதி வள்ளியம்மை என்று

பெண்கள் மூவரின் நாயகன் கவியரசர் !

முடிசூடா மன்னராக திரை உலகில்

முத்தமிழில் திகழ்ந்தவர் கவியரசர் !

திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவதில்

தனி முத்திரை நன்கு பதித்தவர் கவியரசர் !

மயக்கமா கலக்கமா பாடலின் மூலம்

மக்களுக்கு தன்னம்பிக்கை விதைத்தவர் !

வந்த நாள் முதல் பாடலின் மூலம்

வந்த மனிதனின் மாற்றம் உணர்த்தியவர் !

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் பாடலின் மூலம்

குறுக்கு வழியின் தீமையை உணர்த்தியவர் !

தை பிறந்தால் வழி பிறக்கும் பாடலின் மூலம்

தவித்தவர்களுக்கு ஆறுதல் வழங்கியவர் !

ஆசையே அலை போலே பாடலின் மூலம்

ஆசையை அழித்திட அறிவுறுத்தியவர் !

பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலின் மூலம்

பிறந்த மனிதர்களுக்கு மகிழ்ச்சி தந்தவர் !

உள்ளதைச் சொல்வேன் பாடலின் மூலம்

உள்ளதைச் சொல்லி உள்ளத்தில் நின்றவர் !

அச்சம் என்பது மடமையடா பாடலின் மூலம்

அச்சம் அகற்றி வீரம் விதைத்தவர் !

போனால் போகட்டும் போடா பாடலின் மூலம்

போனவர்களுக்காக வருத்தாதே என்றவர் !

வீடு வரை உறவு பாடலின் மூலம்

வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர் ! 

சேரமான் காதலி என்ற உன்னத படைப்பிற்காக

சாகித்ய அகாதமி விருது பெற்றவர் !

குழந்தைக்காக வசனத்திற்காக தேசிய விருதை

குமுகாயம் போற்றிடப் பெற்றவர் கவியரசர் !

வணங்காமுடி என்ற புனைப்பெயரில் எழுதி

வணங்காமுடியாக வாழ்ந்தவர் கவியரசர் !

அர்த்தமுள்ள இந்துமதம் மட்டுமல்ல

இயேசு காவியமும் எழுதியவர் கவியரசர் !

முற் பாதியில் நாத்திகம் போதித்தவர்

பிற் பாதியில் ஆத்திகம் போதித்தவர் !

கவிதை கதை கட்டுரை நாடகம் அனைத்தும்

கணக்கின்றி வடித்த சகலகலாவல்லவர் !

கவியரசர் கண்ணதாசன் உடல் இல்லை !

கவியரசர் கண்ணதாசன் பாடல் உண்டு !

அழிவில்லை எனக்கு என்று சொன்னவர் !

அழியாத பாடல்கள் எழுதி நின்றவர் கவியரசர் !

---------------------------------

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! 

கவிஞர் இரா .இரவி !

சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !

பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து

எட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !

கவிதை கதை கட்டுரை வடித்தவனே !

கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே !

எந்த நாளும் எனக்கு அழிவில்லை என்றவனே !

எந்த நாளும் அழிவின்றி மக்கள் மனங்களில் நின்றவனே !

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்றவனே !

அந்த பறவை போலவே வாழ்ந்து காட்டியவனே !

அச்சம் என்பது மடமையடா என்றவனே !

அச்சம் இன்றி துணிவுடன் வாழ்ந்தவனே !

ஆறடி நிலமே சொந்தமடா என்றவனே !

அற்புத வாழ்வியல் தத்துவம் உரைத்தவனே !

உலகம் பிறந்தது எனக்காக என்றவனே !

உலகில் பிறந்து உணர்வில் கலந்தவனே !

வீடு வரை உறவு வீதி வரை மனைவி !

வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவனே !

ஆசையே அலை போல என்றவனே !

ஆசையை அடக்க அறிவுறுத்தியவனே !

காலத்தைக் கடந்து நின்றவனே !

காலத்தால் அழியாத பாடல் படைத்தவனே !

கல்வெட்டு வரிகளை மனங்களில் பதித்தவனே !

கவிஞன் என்ற சொல்லிற்கு பெருமை சேர்த்தவனே !

உலகம் உள்ளவரை உன் பெயர் நிலைக்கும் !

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !

.

கருத்துகள்