அரசியல்! கவிஞர் இரா .இரவி !

 அரசியல்!   கவிஞர் இரா .இரவி  !


அன்று தொண்டுக்காக வந்தனர் அரசியலுக்கு 

இன்று துட்டுக்காக வருகின்றனர் அரசியலுக்கு !


அன்று நல்லவர்கள் பெருகி இருந்தனர்  அரசியலில்  

இன்று அல்லவர்கள் பெருகி உள்ளனர் அரசியலில் !


அன்று  மக்களுக்காக சேவை அரசியல் செய்தனர் 

இன்று தன் மக்களுக்காக அரசியல் செய்கின்றனர் !


அன்று சொந்தப் பணம் தந்து மகிழ்ந்தனர் 

இன்று சின்ன மீனை இட்டு சுறாமீன் பிடிப்பு !


அன்று காந்தி காமராசர் கக்கன் அரசியலில் 

இன்று அவர்களைப் போல ஒருவரும் இல்லை !


அன்று வாடகை  வீட்டில் வாழ்ந்தனர் தலைவர்கள் 

இன்று மாட மாளிகைகளில் வாழ்கின்றனர் 


அன்று அம்மாவிற்குக் கூட கூடப் பணம் தர மறுத்தார் 

இன்று வாரிசுகளுக்கு கோடிகளை வழங்குகின்றனர் !   


அன்று ஊழல் என்னவென்று அறியாது வாழ்ந்தனர் 

இன்று அரசியலில் எங்கும் எதிலும் ஊழலோ ஊழல்!






கருத்துகள்