எழுந்து வாடா இமயம் நீயே ! கவிஞர் இரா .இரவி !



எழுந்து வாடா இமயம் நீயே ! கவிஞர்  இரா .இரவி !

உறக்கம் விடுத்து எழுந்து வாடா இமயம் நீயே
உனக்கு இணை வேறு யாருமில்லை நீயே !'

தேனீயிடம் நீ  உழைப்பைக் கற்றுக்கொள்
தரணி போற்ற உழைத்து வாழ் வேண்டும் !

எறும்பிடம் நீ சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்
எதிர்காலத்திற்கு சேமித்து வாழ் வேண்டும் !

காகத்திடம் நீ ஒற்றுமையைக் கற்றுக்கொள்
கற்பதை நிறுத்தாமல் வாழ் வேண்டும் !

நரியிடம் நீ தந்திரத்தைக் கற்றுக்கொள்
நல்லவனாகவும் வாழ்ந்திட வேண்டும் !

புலியிடம் நீ வீரத்தைக் கற்றுக்கொள்
புவி போற்றிட வாழ்ந்திட வேண்டும் !

தாழ்வு எண்ணத்தை தகர்த்திட வேண்டும்
தன்னம்பிக்கையை வளர்த்திட வேண்டும் !

உலகில் பிறந்த அனைவரும் ஒன்றுதான்
ஒற்றுமையோடு நீ வாழ்ந்திட வேண்டும் !


கருத்துகள்