கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ் படித்து வெல் தமிழா ! தலை நிமிர்ந்து நில் தமிழா !





கவிமாமணி  சி  .வீரபாண்டியத்  தென்னவன்  அவர்கள்  
தந்த  தலைப்பு !

தமிழ் படித்து வெல் தமிழா ! தலை நிமிர்ந்து நில் தமிழா !

கவிஞர் இரா .இரவி


தமிழ் படித்து வென்றவர்கள் கோடி அறிந்திடுக
தமிழால் சாதித்து நின்றவர்கள் கோடி புரிந்திடுக

அறிவியல் அறிஞர் அப்புதுல் கலாம் அன்றே
அழகுதமிழில் தொடங்கினார் கல்வியை  நன்றே !

மயில்சாமி அண்ணாத்துரை தொடக்கக் கல்வியை
மனம் விரும்பி அழகு  தமிழில்தான் தொடங்கினார் !

இன்றைய அறிவியல் அறிஞர் சிவன் படித்ததும் 
இனியதமிழ் என்பதை அனைவரும் அறிந்திடுக !

பட்டிமன்ற நடுவர்கள் அனைவரும் பார்போற்றும்
புகழ்  பெறக் காரணம் அவர்கள் கற்ற தமிழ் !

உலகில் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை
உலகம் முழுவதும் பேசப்படும் நம் தமிழ் !

தமிழ் படித்தால் தன்னம்பிக்கை நன்கு  வளரும்
தமிழ் படித்தால் தமிழ்ப் பண்பாடு நன்கு விளங்கும் !

உலகத் தமிழர்கள் யாவரும் ஓரணியில் திரள்வோம்
ஒப்பற்ற தமிழ் படித்து சாதனைகள் பல புரிவோம் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://tamil.pratilipi.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%20.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF

கருத்துகள்