தனித்திரு விழித்திரு ! கவிஞர் இரா .இரவி !





தனித்திரு விழித்திரு ! கவிஞர் இரா .இரவி !

கொரோனா கொடிய நோய் தொற்று புரிந்திடு
கூடி இருந்தால் தொற்று விடும் அறிந்திடு  !

சீனாவை சின்னா  பின்னமாகியது கொரோனா
சப்பானையும் கொரோனா சிதைத்து  விட்டது !

இத்தாலியின் மக்கள் தொகையைக் குறைத்து
இங்கிலாந்து இளவரசரையும் தொற்றியது !

அமெரிக்காவிற்கு அடி மேல் அடி கொடுத்தது
அதிபரையும் சோதனைக்கு உள்ளாக்கியது !

பரவாத நாடே இல்லை என்னுமளவிற்கு
பரவி விட்டது  கிருமி  உலகம் முழுவதும் !

வழிபாட்டுத் தலங்களை  மூட வைத்தது
வழியே தெரியாமல் தவிக்க விட்டது !

வணிக நிறுவனங்களை முடக்கி விட்டது
வயிற்றுக்கு உணவு கிடைப்பதே சாதனையானது ! 

கூட்டமாகக்  கூடுவதை முழுவதும் நிறுத்திடு
கைகளை சோப்பால் அடிக்கடி கழுவிடு !

கொடிய அரக்கன் கொரோனாவை கொல்ல
கண்டுபிடிக்கப்படவில்லை இன்னும் மருந்து !

விரைவில் மருத்துவர்  மருந்து காண்பர்
வரும்வரையில் வீட்டிலிருப்பதே மருந்து !

வீராதி வீரனையும் விட்டு வைக்காது
சூராதி சூரனையும் தள்ளி வைக்காது ! 



கண்ணுக்குத் தெரியாத கிருமியிடம் தோற்றோம்
கர்வம் அகற்றி மனிதம் போற்றி வாழ்வோம் !

கருத்துகள்