சும்மா இருக்கவில்லை நாங்கள் ! கவிஞர் இரா .இரவி !

சும்மா இருக்கவில்லை நாங்கள் ! கவிஞர் இரா .இரவி !

சும்மா இருப்பது சுகமல்ல கடினம் என்பதை
சும்மா சும்மா மனம் உணர்த்திச் சென்றது !

சுய  ஊரடங்கு எப்படி உள்ளது பார்ப்பத்ற்கு
சும்மா வெளியில் நடந்து வந்தேன் !

வழக்கமான கடை திறக்கவில்லை
வேறு கடை  இருக்கா தேடினேன் !

மறைவாக இயங்கியது ஒரு கடை
மனம் விரும்பிய செய்தித்தாள் கிடைத்தது !

சற்று நடந்து வந்தபோது ஒரு இடத்தில
சுவையான தேநீரும் கிடைத்தது !

உணவகங்கள் மூடி இருந்ததன
உணவுக்கு வழியின்றி சிலர் தவித்தனர் !

இல்லம் வந்து தொலைக்காட்சியில்
இனிதே அமர்ந்து பார்த்தேன் !

வெறிச்சோடியது   வெறிச்சோடியது
வரிசையாக காட்டினார்கள் வேறு செய்தி இல்லை !

கணினியில் அமர்ந்து முகநூல் வாசித்தேன்
கவிதை உறவு ஏர்வாடியாரின் அறிவிப்பு !

மனதில் தோன்றிய வரிகளை வடித்தேன் 
மீண்டும் ஒருமுறை வாசித்து அனுப்பினேன் !

ஒரு நாளே ஒரு யுகமாகக் கழிந்தது
எப்படித்தான் சிலர் சும்மா இருக்கின்றனர் ?

நீட்டிப்பு என்று தகவல் வந்தது போதும்
நீட்டிப்பு இனி வேண்டாம் தாங்காது !

கருத்துகள்