அதிரூபன் தோன்றினானே ! கவிஞர் இரா .இரவி !




அதிரூபன் தோன்றினானே ! கவிஞர் இரா .இரவி !

அதிரூபன் தோன்றினானே என்று கூட்டம் கூடியது
அதில் நால்வர் மரணம் அடைந்தனர் வேதனை !
கடவுளே காப்பாற்று என்று வேண்டிட சென்றபோது
கடவுள் காப்பாற்றவில்லை உயிர்கள் பிரிந்தன !
முதியவர்கள் கர்ப்பிணிகள் நோயாளிகள்
முற்றிலும் வரவேண்டாம் என்று அறிவிப்பு !
கடவுளின் பெயரால் வருடம் ஒரு வதந்தி
கண்டபடி பரப்பி வசூல் வேட்டை நடக்குது !
அத்தி வரதரைக் காண வேண்டுமென்று
அடங்காத கூட்டம் தினமும் கூடுது !
உள்ளூரில் உள்ள பெருமாளைக் காண
ஒருவரும் வரவில்லை வருத்தத்தில் அவர் !
ஆட்டு மந்தைக் கூட்டமென கூட்டம்
அல்லல் பட்டு இடிபட்டு வருத்தத்தில் !
காவலரகளும் பிடித்து இழுத்து விடுகின்றனர்
காணும்போது பாவமாக இருக்கின்றது !

கருத்துகள்