அன்பே சிவம்! கவிஞர் இரா. இரவி



அன்பே சிவம்!
கவிஞர் இரா. இரவி.
******
அன்பே சிவம் என்பதை அறிந்திடுங்கள்
அனைவரும் உடன்பிறப்பாக உடன்படுங்கள்!

சைவம் வைணவம் வேறுபாடு வேண்டாம்
சங்கமித்து ஒற்றுமையாக வாழ்ந்திடுங்கள்!

வேற்று மதத்தவரையும் மதித்து வாழுங்கள்
வேற்றுமை இன்றி உடன்பட்டு வாழுங்கள்!

மதத்தின் பெயரால் மோதல்கள் வேண்டாம்
மனிதம் போற்றி அன்பைச் செலுத்துங்கள்!

மாட்டிற்காக மனிதனைக் கொல்வது மடமை
மனித உயிரின் மகத்துவம் அறிவது கடமை!

கடவுளின் பெயரால் கலவரங்கள் வேண்டாம்
கண்டபடி பேசி புண்படுத்திட வேண்டாம்!

மதத்தை விட மனிதம் பெரிது உணருங்கள்
மனிதனை மனிதன் மதித்து நடந்திட வேண்டும்

வன்முறை போதிக்கவில்லை எந்த மதமும்
வன்முறை போதித்தால் அது மதமே இல்லை!

கருத்துகள்