மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி.

மகிழ்வோர் மன்றம்!நகைச்சுவை. நாள் 11.5.2019.
தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி.
******
பேனுக்கும் போனுக்கும் என்ன வித்தியாசம்
பேனு நம்மை தோண்டும், போனை நம்ம நோண்டுவோம்!
*****
வங்கிகளை சனிக்கிழமை மூடிவிட திட்டம்
அப்படியே காலாண்டு தேர்வு விடுமுறை முழு ஆண்டு தேர்வு விடுமுறை என்று விட்டு இரண்டு மாதம் மூடி விடுங்கள்.
*****
உங்களுக்கு ஒரு துன்பம் வரும்போது நண்பர்கள், உறவினர்கள்
உடன் இருப்பார்கள். நம்பவில்லை என்றால் திருமண நிழற்பட ஆல்பத்தைப் பாருங்கள்.  
..............................
உங்க வீட்டில் சண்டை வந்தால்
 அம்மா கை ஓங்கும், அப்பா கை வீங்கும்
*****
மேலாளர் : ஏன் தாமதம்?
நீங்க தானே கால நேரம் பார்க்காமல் வரவேண்டும்
என்று சொன்னீங்க.
*****
பூனைக்கு ஏண்டா மூக்கு வழியா பால் ஊத்துறே
பாவம் இது வாயில்லாத ஜீவன்!
*****
பணம் கட்டினால் கடவுளை அருகே பார்க்கலாம்
அனாதை இல்லத்திற்கு பணம் கட்டினால்
உங்களையே கடவுளாகப் பார்ப்பார்கள்!
*****
கோழி முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வரும்
வாத்தியார் முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வருமா?
*****
ஏண்டா மாத்திரையை கீழே போடுறே
மருத்துவர் சொன்னார், தலைவலி வந்தால்
மாத்திரை போடுங்க என்றார்.
*****
கல்யாணம் ஆகாதவனுக்கு முடி விழுகுதேன்னு கவலை
கல்யாணம் ஆனவனுக்கு அடி விழுகுதேன்னு கவலை
*****
பொய்யான பல் மருத்துவர்னு எப்படி கண்டுபிடிச்ச
பல் ஆடுதுனு சொன்னால் எந்தப்பாட்டுக்கு ஆடுதுனு கேட்டாரு!
*****
உப்பு சைவமா? அசைவமா?
சாம்பாரில் போட்டால் சைவம், கறிக்குழம்பில் போட்டால் அசைவம்!
*****
இந்தியாவோட இன்சியல் என்ன? G எப்படி?
தேசப்பிதா காந்தி, அப்படினா 
தானே?
*****
கதை எழுதும் ஆசிரியரை விளம்பரம் எழுதச் சொன்னது தப்பாப் போச்சு ஏன்? 
எல்லாம் சொல்லிட்டு கடைசியில்   உண்மையல்ல எல்லாம் கற்பனையேனு சொல்லிட்டார். 
 
,*****
கணவன் : இதெல்லாம் காபியா? நாய் கூட குடிக்காது.
மனைவி : நாய்க்கு நான் பூஸ்ட் கொடுத்திட்டேன்.
*****
விசா இல்லாமல் வியட்நாமுக்கு கூட போகலாம்
வேலை இல்லாமல் சொந்தக்காரனுக வீட்டுக்குப் போக முடியாது.
*****
மருத்துவர் :     (எல்லா சோதனையும் செய்து விட்டுச் சொன்னார்)  உங்க மனைவிக்கு கொழுப்பு அதிகம்.
கணவன் :       எனக்கு முன்பே தெரியுமே! இதுக்கு போய் 1000 ரூபாய்
செலவு வச்சிட்டீங்களே!
*****
நோயாளி :      வெயில் தாங்கலே, ஐஸ்யில் இருக்கனும்     போல இருக்கு .
மருத்துவர் : அவசரப்படாதீங்க, அறுவை சிகிச்சை முடிஞ்சதும்
               நிரந்தரமா ஐஸ் பெட்டிக்கே போயிடுவீங்க.
*****
சத்தம் சோறு போடுமா? எப்படி.
குக்கர் சத்தம் போட்டால் தான் சோறு கிடைக்கும்.
*****
தோழியிடம் சொன்னாள் : குடிச்சிட்டு வந்தா வீட்டு வாசற்படி மிதிக்காதேன்னு கணவனிடம் சொன்னேன்.தப்பாப் போச்சுடி
அந்த ஆளு குடிச்சிட்டு வந்து ஓட்டைப் பிரித்து வாரான்.
*****
உங்க வீட்டுக்காரரை திட்டுவியா?
சே சே திட்டவே மாட்டேன் .அடிப்பதோடு சரி!
*****
மருத்துவர் : பயப்படாதீங்க தைரியமா இருங்க
நோயாளி : நோயுக்கே பயப்படலே, உங்க கட்டணத்துக்கா
 பயப்படுறேன்.
*****
பணத்தை எல்லாம் பிடுங்கி விட்டு
அன்பளிப்பாக பர்ஸ் தரும் இடம் நகைக்கடை!
*****
ஏன் தாமதம் (ஆசிரியர்)
மாணவன் : பள்ளி அருகே உள்ளது. மெதுவாகச் செல்லவும் என்று எழுதி இருந்தது.
*****
என்னால பச்சை முட்டை சாப்பிட முடியாது ஏன்?
எங்க ஊரில் வெள்ளை முட்டை தான் கிடைக்கும்.
*****
மனைவி : ஏங்க சொர்க்கத்தில் கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே!
கணவன் : ஆமாண்டி அதனால் தான் அதுக்குப் பெயர் சொர்க்கம்.
*****
ஏன் மருந்து பாட்டிலை தடவிக்கிட்டி இருக்கே
மருத்துவர் சொன்னார் வலி வந்தா தடவுங்க என்று
*****
போன வருடம் வெயிலுக்கு ஆதார் கார்டு மாதிரி முகம் ஆச்சு!
இந்த வருடம் வெயிலுக்கு 
முகம் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மாதிரி ஆயிருச்சு
*****
இரவு தூக்கம் வரவில்லை என்று கவலைப்பட்டேன்
பிறகு தான் புரிந்து கொண்டே உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்று!
*****
ஏணிப்படியாக இருக்க வேண்டியவர்கள்
ஏன் இப்படி எனக் கேட்கும்படி ஆகிவிடுகிறார்கள்!
*****
அப்பா, அம்மாவிடம் அடி வாங்காதவன் கூட
கொசுவிடம் கடி வாங்குவான்!
*****
உங்க மகன் கீதைப்படி நடப்பவனா? எப்படி
என் மருமகள் பெயர் கீதை!
*****
மருத்துவர் ;உன் உதட்டில் எப்படி தேள் கொட்டியது ?
மனைவியை கொட்டியதற்காக தேளுக்கு முத்தம் கொடுத்தேன்
*****
தை மாதம் சூரியனுக்கு நாம் பொங்க வைப்போம்
சித்திரை மாதம் சூரியன் நமக்கு பொங்க வைக்கும்!
*****
அசைவ உணவு விடுதியில் சர்வரிடம் மூளை இருக்கா?
உங்களுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாருக்கும் இருந்தது!
உங்களுக்குத் தான் இல்லை.!தீர்ந்து போச்சு
*****
சாம்பாரில் போட்டு இருந்த முருங்கைக்காய் சூப்பரா இருந்திச்சு
சர்வர் : அது என் காதில் இருந்த பென்சில். தவறி சாம்பாரில் விழுந்துவிட்டது.
*****
மாலை எதுக்கு வாங்கச் சொல்றீங்க
(மருத்துவர்;அறுவை சிகிச்சையில் இவர் பிழைத்து விட்டால் எனக்குப் போடுங்க. இறந்துவிட்டால் அவருக்குப் போடுங்க! 

.

கருத்துகள்