நாட்டுப்புறக் கவிதை ! கவிஞர் இரா .இரவி !






நாட்டுப்புறக் கவிதை ! கவிஞர் இரா .இரவி !

கொசுவம் வைத்த குமரிப்பெண்ணே 
கொஞ்சம் இங்கே வந்து நில்லடி !

மச்சான் இங்கே காத்து இருக்கேன் 
மனசை உன்னிடம் தந்து விட்டேன் !

கம்மாக்கரையில் பேசிமகிழ்ந்து  நாளாச்சு 
கன்னிப்பெண்ணே  கொஞ்சம் மனசு வையடி !

கரும்புத் தோட்டம் விளைஞ்சு நிக்குது 
கனிந்து வந்தால் இனிமை இருக்குது !

அடிக்கடி உன்னைப் பார்க்க முடியலை 
அடிக்குது மனசு மணியைப் போல !

இடுப்பை  ஆட்டி நீ நடக்கையிலே 
என்னவோ செய்யுது என் மனசிலே !

ஆசைப் புள்ளே  ஆழகுப்  புள்ளே
அன்பு காட்டும் செவத்தைப் புள்ளே !

கதிர் போல விளைஞ்சு நிக்கிறே 
காளை எனக்கு பொருத்தமா இருக்கிறே !

சோளக்காட்டுப் பொம்மை  போல நிக்கிறேன் 
சுகம் காட்ட வாடி புள்ளே வயலுக்கு !

குவித்து வைத்த நெல்லு அப்படியே இருக்கும் 
குறி போட்டு வைத்தால் மாறாதிருக்கும் !

நல்லவங்க வாழ்கின்ற நம்ம ஊரு
நாமும் கரம் சேர்த்து வாழ்ந்திடலாம் !

இருமனம் இணைந்து வெகு நாளாச்சு 
திருமணம் புரிந்திடுவோம் வா புள்ளே !


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்