தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.



தமிழும் நானும்!

கவிஞர் இரா. இரவி.

******

தமிழும் நானும் நகையும் சதையும் போல
தமிழ் குருதியில் ஒன்றாகக் கலந்திட்ட உறவு!



தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன்
துக்கம் விரட்டிடும் ஆற்றலுண்டு தமிழுக்கு !



தமிழ் படித்தவர்களுக்கு வாழ்நாள் நீளும்
தமிழுக்கு வாழ்விக்கும் திறமை உண்டு!



தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்
தரணியின் முதல்மொழி எந்தன் தாய்மொழி!



அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நமது
அண்ணால் தமிழனாகப் பிறக்க விரும்பினார் !



மாவீரர் நேதாசியும் அடுத்தபிறவி இருந்தால்
மண்ணில் தமிழனாகப் பிறக்க விரும்பினார்!



தமிழின் அருமை பெருமை தரணி அறிந்தது
தமிழன்தான் பெருமையை அறியாமல் இருக்கிறான் !



அரசுப்பள்ளியில் பயின்றதால் எனக்கு தமிழ்ப்பற்று உள்ளது
ஆங்கிலப்பள்ளியில் பயின்று இருந்தால் தமிழ்ப்பற்று இருக்காது!



தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் புரட்சிக்கவிஞர்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்பேன் நான் !



அமுதம் வேண்டுமா? தமிழ் வேண்டுமா? என்றால்
அமுதம் வேண்டாம் தமிழ் வேண்டும் என்பேன் !



பெற்ற தாய்க்கு அடுத்து நேசிப்பதை தமிழை
பெற்ற தாய் தடுத்தாலும் தமிழ்ப்பகையை விடுவதில்லை !



தமிழுக்காக எழுதியும் பேசியும் வருகிறேன்
தமிழுக்காக தேவைஎன்றால் உயிரையும் தருவேன் !



தமிழன்னையை அரியணையில் ஏற்றி மகிழ்வேன்
தமிழே எந்தன் உயிர் மூச்சு என்பேன்!



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்