தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !



தினமணி கவிதைமணி தந்த தலைப்பு 

வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !

வனவாசம் விரும்புகின்றது என்  மனம் 
வனத்தில் சுவாசம் எங்கும் நல்ல வாசம் !

நாட்டில் வாழும் மனித மிருங்கங்களை விட 
காட்டில் வாழும் மிருங்கங்கள் கொடியதன்று !

பசுத்தோல் போர்த்திய புலிகள் பெருகிவிட்டன 
பண்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டன !

வனத்தில் சாதிமதச் சண்டைகள் இல்லை 
வனத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை !

உண்ணும் உணவிற்கு பஞ்சம் இல்லை 
ஒருவரும் பொல்லாங்கு பேசுவது இல்லை !

விலங்குகளுடன்  நட்பாக   வாழலாம் 
பறவைகளுடன் நன்கு  பழகி மகிழலாம் !

செயற்கை உணவுகள் அங்கு இல்லை 
சிதைக்கும் நோய்களும் வருவதில்லை 

கோடிகள் கொள்ளையடிக்கும் கூட்டம் இல்லை 
கேடிகளின் அடாவடி அங்கு இல்லை !

தொல்லைதரும் தொலைக்காட்சி இல்லை 
துன்பங்கள் துயரங்கள் அங்கு இல்லை !

வரப்புச்சண்டைகள் அங்கு இல்லை 
வாய்க்கால் சண்டைகள் அங்கு இல்லை !

பெட்ரோல் அங்கு தேவையே இல்லை 
பெரும் தொல்லை இல்லவே இல்லை !

மாசுக்காற்று காட்டில் இல்லவே இல்லை 
மக்காத குப்பைகளும் அங்கு இல்லை !

வனவாசத்திற்கு யாரும் வருந்த வேண்டாம் 
வனவாசம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்