மன்னிப்பாயா ? கவிஞர் இரா .இரவி !

மன்னிப்பாயா ? கவிஞர் இரா .இரவி !


.குற்றம் செய்யாமல் வாழ்ந்து  இருந்தால் தலை 
குனிந்து மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை !

முடிந்தளவு தவறு இன்றி நேர்மையாக 
மனசாட்சிப்படி என்றும் வாழ வேண்டும் !

பிறர் தன்னிடம் எப்படி நடக்க எதிர்ப்பார்க்கிறோமோ 
பிறரிடம்  நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் !

மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் கூடாது 
மற்றவரை பேசாதிருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டாம் !

உன்னைப் போலவே பிறரையும்  நேசித்தால்  
ஒருபோதும் குற்றம் செய்திட மாட்டாய் !

அவசரப்பட்டு கடும் சொல் பயன்படுத்தாதே 
அன்பால் இன்சொல்   என்றும் பேசுக !

யாரையுமே  எப்போதும்  தாழ்வாக எண்ணாதே  
யாவரும் சமம் என்ற எண்ணம் வேண்டும் !

நானே பெரியவன் என்ற எண்ணம் தகர்த்திடு 
நானே சிறியவன் என்று எண்ணுவதும் தவறு !

கர்வம் வந்தால் காணாமல் போவாய் 
கனிவு இருந்தால் உயரம் செல்வாய் !

மன்னிப்பு கேட்க அவசியம் வர வேண்டாம் 
மனதளவில் நல்லவனாகவே வாழ்ந்திடு !

கருத்துகள்