நன்றி .தினமலர்

நன்றி .தினமலர்
ஷார்ஜாவில் கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி
ஷார்ஜா : ஷார்ஜாவில் தமிழ் ஆர்வலர்களின் சார்பில் கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி 16.03.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார்.
கவிஞர் திண்டுக்கல் ஜமால் நூல் குறித்து தனது கருத்துரை வழங்கினார். அப்போது கவிஞர் ரவி அவர்கள் அரசுத்துறையில் பணிபுரிந்து வந்த போதிலும், தமிழ் மீது ஆர்வம் கொண்டு சிறப்பான முறையில் கவிதைகளை வடித்துள்ளார். அவரது பணி பாராட்டுக்குரியது. தொடர்ந்து அவர் இன்னும் பல நூல்களை வெளிக்கொணர வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை அக்மல், திண்டுக்கல் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள்